April

எளிய விசுவாசிகளுக்கு உதவுதல்

2024 ஏப்ரல் 10 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,11 முதல் 12 வரை) “இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்” (வசனம் 11). தாவீதின் பராக்கிரமசாலிகளில் மூன்றாவதாகச் சொல்லப்பட்டிருப்பவன் ஆகேயின் மகனாகிய சம்மா என்னும் ஆராரியன். இஸ்ரவேலரின் வயல்வெளியைத் தாக்கி, மக்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான உணவு தானியங்களை அழித்துப்போடும் எண்ணத்துடன் வந்த பெலிஸ்தியர்களின் முயற்சியைத் தோற்கடித்தான் இந்த சம்மா என்னும் வீரன். வயல் நிலைத்தைப் பேணி, உழுது, ஏற்ற பருவத்தில் விதைத்து, களையெடுத்து…

April

இறுதிவரை போராடுதல்

2024 ஏப்ரல் 9 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,9 முதல் 10 வரை) “இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்” (வசனம் 9). தாவீதின் பராக்கிரமசாலிகளில் இரண்டாவதாக இடம் பெறுபவன் தோதோவின் மகன் எலெயாசார் என்பவன். பெலிஸ்தியர் படையெடுத்து வந்தபோது ஏதோ ஒரு காரணத்தால் இஸ்ரவேலின் படை போரிடாமல் திரும்பிச் சென்றபோதிலும், இவன் தைரியமாக தாவீதின் உடனிருந்து தன்னந்தனியாக போரிட்டு வெற்றிக் கனியைப் பறித்தவன். வீரர்கள் எல்லாரும் போரிடாமல் திரும்பிச் சென்றாலும்…

April

சார்ந்தோருக்குப் பெருமை சேர்த்தல் 

2024 ஏப்ரல் 8 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,8) “தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்” (வசனம் 8). தாவீதின் பராக்கிரமசாலிகளின் பட்டியலில் முதலாவது இடம்பெறுபவன் யோசேப்பாசெபெத் என்பவன். இவன் சேர்வைக்காரரின் தலைவன் அதாவது தலைமைப் பாதுகாப்பு ஆலோசகர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி. இவன் ஒரே நேரத்தில் எண்ணூறு பேர்களை வெட்டினான் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவனது தனிப்பட்ட வெற்றி அந்த…

April

உண்மையுள்ள ஊழியர்கள்

2024 ஏப்ரல் 7 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,8) “தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன …” (வசனம் 8).     இந்த அதிகாரத்தின் முதல் பகுதி (வசனங்கள் 1 முதல் 7), கர்த்தர் தாவீதுக்குச் செய்த நன்மைகளினிமித்தம் அவரது பெருமைக்குரிய காரியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் அடுத்த பகுதி, தாவீதின் பராக்கிரமசாலிகளின் பெயர்களை அறிவித்து அவர்களைக் கனப்படுத்துகிறது. ஆண்டவரைச் சுமந்த கழுதைக்குட்டியும் வேதத்தில் இடம்பெற்றுள்ளதுபோல, இங்கே தாவீதினிடத்தில் தங்கள் விசுவாசத்தையும், ஒப்புவித்தலையும், வீரத்தையும் காட்டிய சேவகர்களின் பெயர்கள் இடம்…

April

உடன்படிக்கையின் வாழ்க்கை

2024 ஏப்ரல் 6 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,5 முதல் 7 வரை) “சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்” (வசனம் 5). “என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ?” (வசனம் 5) என்பது தன் வீட்டில் நடைபெற்ற சோகமானதும் வருத்தமானதுமான காரியங்களின் பிரதிபலிப்பாகும். அதாவது தேவனுடைய முழுமையான ஆசீர்வாதம் தன் குடும்பத்தின்மேல் இல்லையோ என்று ஐயம் கொண்டான். தன்னுடைய தீமையான செயலின் காரணமாக இரண்டு மகன்கள் கொலை செய்யப்பட்டார்கள். தன்னைப் போல…

April

நீதியின் வாழ்க்கை

2024 ஏப்ரல் 5 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,2 முதல் 4 வரை) “கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது” (வசனம் 2). “இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன்” என்னும் அடைமொழி அவனுக்குப் பொருத்தமானது.  பாடல்கள் எழுதுவதும், அவற்றிற்கு இசை அமைப்பதும் ஒரு தனித்துவமான திறன். தாவீது இந்தத் தாலந்தை கர்த்தரிடமிருந்து அற்புதமாகப் பெற்றிருந்தான். தாவீதால் எழுதப்பட்ட பெரும்பாலான சங்கீதங்கள் கர்த்தரைப் பற்றிய…

April

நல்லதொரு முடிவு

2024 ஏப்ரல் 4 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,1) “தாவீதுடைய கடைசி வார்த்தைகள் மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று” (வசனம் 1). தாவீதுடைய கடைசி வார்த்தைகள். மரணப்படுக்கையில் இருந்து பேசிய இறுதி வார்த்தைகள் அல்ல. மாறாக தன் கடைசி நாட்களில் கர்த்தர்மீது அவன் கொண்டிருந்த வாஞ்சையையும் அவருக்காக அவன் கொண்டிருந்த ஏக்கத்தையும் பிறருக்குப் பறைசாற்றும் தீர்க்கதரிசன வார்த்தைகள். இவை நம்முடைய மனதைக் கவரும் அறிவார்த்தமான வார்த்தைகள். ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதன்…

April

தெய்வீக பாதுகாப்பு 

2024 ஏப்ரல் 3 (வேத பகுதி: 2 சாமுவேல் 22,31 முதல் 51 வரை) “தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்” (வசனம் 31). இருளில் இருக்கிறவனுக்கு அடுத்த அடி எடுத்துவைப்பதற்கான பாதை தெரிந்துவிட்டது. ஆயினும் அதில் நம்பிச் செல்ல முடியுமா? கர்த்தர் நமக்கு வெளிச்சத்தைத் தருவாரானால் நாம் நிச்சயமாகவே நம்பிச் செல்லலாம். கண் தெரியாத ஒரு குருடனுக்கு இன்னொரு குருடன் வழிகாட்ட முடியாது. அவ்வாறு சென்றால் இருவரும்…

April

தெய்வீக வல்லமை

2024 ஏப்ரல் 2 (வேத பகுதி: 2 சாமுவேல் 22,28 முதல் 30 வரை) “கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்” (வசனம் 29). கர்த்தர் எளியவர்களைக் காப்பாற்றுகிறவர் மட்டுமன்று, மேட்டிமையான கண்களை உடையவர்களைத் தாழ்த்துகிறவராகவும் இருக்கிறார். எவர்கள் மேட்டிமையான கண்களை உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் கர்த்தருடைய பார்வையிலிருந்தும் தப்பமுடியாது என்ற நம்பிக்கையைத் தாவீது கொண்டிருந்தான். இங்கே எளியவர்கள் என்னும் வார்த்தை நவீன மொழிபெயர்ப்புகளில் தாழ்மையானவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. தன்னைத்தான் குறைத்து மதிப்பிடுகிறது…

April

மனிதனும் கடவுளும்

2024 ஏப்ரல் 1 (வேத பகுதி: 2 சாமுவேல் 22,21 முதல் 27 வரை) “கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்” (வசனம் 21). “என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்” (வசனம் 21) என்று சொல்லும் போது, தாவீது பாவமே செய்யாத பரிபூரணமானவன் என்ற பொருளில் சொல்லவில்லை. எல்லா மனிதர்களைப் போலவே அவனும் ஒரு பாவியான மனிதனே. ஆயினும் பாவங்களை ஒத்துக்கொள்வதிலும், அதை அறிக்கையிடுவதிலும் உண்மையாயிருந்தான். அவன்…