மத்.13:44-58
அனைத்திற்கும் மேல்: கடவுள் இராஜ்யத்தைக் கண்டோர் அதன் ஆசிகளைப் பெற அனைத்தையும் விட்டுக் கொடுப்பார். வ. 52-இயேசுவின் சீடன் இராஜ்யத்துக்கடுத்தவைகளை அறிந்தவன். அவன் இயேசுவை அறியும் அறிவென்னும் பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் கொடுக்கிறான். புதியவை – நிறைவேற்ற வந்த கிறிஸ்து வெளிப்படுத்துகிறவை. பழையவை – இப்பொழுது வெளிப்படுத்தப்பட்ட இதுவரை மறைத்திருந்த கடவுளின் அநாதித்திட்டம் (எபேசி 3:1-6). அவனைவரையும் போன்றவர்: இயேசு தம் கலிலேயப் பணியை நாசரேத்தில்தான் தொடங்கினார் (லூக் 4:16-30). ஆனால், தள்ளப்பட்டார். இம்முறையும் நாசரேத்தூரார் இயேசு தங்களில் ஒருவர்தானே என்று அவரை விசுவாசிக்கவில்லை. அவரது அறிவையும் வல்லமையையும் கண்டு வியந்தனரே ஒழிய ஏற்றுக்கொள்ளவில்லை எனவே, நம்பிக்கை கொள்ளாதோர் மத்தியில் நம்பிக்கையை உண்டாக்க அற்புதங்களைச் செய்யவில்லை. இயேசு கடவுளின் வல்லமையையும் வருகையையும் ஏற்றுக் கொள்ளா இருதயக் கடினம் உண்டா, எனக்கு?