ஏசாயா 27:1-13
அப்போகிலிப்ஸ் எனக்கூறப்படும் இப்பகுதியில் உலகின் சக்திகளைக் குறிப்பிட தீர்க்கன் ஏசாயா சில பழங்கால கதைகளில் வரும் ஊரும் பிராணிகளை உபயோகிக்கிறார். லிவியாதான் அசீரியப் பேரரசையும், பாபிலோனியப் பேரரசையும் குறிக்கும் வலுசர்ப்பம். எகிப்தைக் குறிக்கும் இந்த வசனங்கள் எல்லாப் பேரரசுகளின் மேலும் கர்த்தருக்குக் கிட்டும் இறுதி வெற்றியைக் குறிக்கிறது. ஏசாயா தீர்க்கன் இஸ்ரவேலின் இக்கட்டான சூழ்நிலையை நினைவுபடுத்துகிறார். ஒரு குறிப்பிட்ட காலம் சிறையிருப்பின் இன்னலை அனுபவிக்க ஆண்டவர் இஸ்ரவேலை ஒப்புக் கொடுத்தார். அவர் இஸ்ரவேலை அழிக்கவில்லை. அவர்களது எதிர்கால அழைப்பிற்கும் ஊழியத்திற்கும் சிறப்புக் கொடுக்கவே விக்ரக வணக்கத்தை விட்டு தம்மிடம் திரும்பினால் கர்த்தர் அவர்களை மன்னிப்பார். தண்டனையில் சிறந்த மீட்பின் நோக்கம் காணப்படுகிறது. கவலையினால் அழுத்தப்படுகிறாயா? இயேசு கிறிஸ்துவிடம் ஜெபி. பெரிய எக்காளம் ஊதப்படும். சிதறிய இஸ்ரவேலர் ஒன்று சேர்க்கப்படுவதைக் குறித்த நிச்சயத்தைப் பார்க்கிறோம். சீயோனுக்கு வெளியே இருக்கும் மக்கள் எருசலேமில் வந்து கர்த்தரை வழிபட அழைப்பதற்காக கடைசி நாளில் தொனிக்கும் எக்காளத்திற்கும் இது முன்னோடியாக அமைகிறது.