ஜீன் 8
தாம் ஒருவரே ஞானமுள்ளவராயிருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்து மூலமாய் மகிமையுண்டாவதாக. (ரோ.16:27)
திருமறையில் முழுவதும் பின்னிக் கிடக்கிற ஒரு இழைபோன்று இவ்வுண்மை உள்ளது. சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்! “அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் இருக்கும், அவருக்குத் தான் ஆலோசனையும் புத்தியம் உண்டு. அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு. மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும் அவர் கையின் கீழிருக்கிறார்கள்” (யோபு 12:13,16). “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர். பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது” (சங்.104:24). “கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்” (நீதி.3:19). “தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது” (தானி.2:20). “எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று” (1.கொரி.1:21). “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார் (1.கொரி.1:31).
தேவனுடைய நிறைவான நுண்ணறிவு, தவறுசெய்ய இயலாத உய்த்துணரும் மற்றும் பிழையற்ற தீர்மானங்கள் அகியவற்றையே “தேவஞானம்” என்னும் சொற்றொடர் குறிக்கிறது. மிகவும் சிறந்த விளைவுகளை, மிகவும் சிறந்த முறையில் செயலாற்றக்கூடிய அவருடைய திறனே தேவஞானம் என ஒருவர் வரையறுத்துக் கூறியுள்ளார். இது அறிவைக் காட்டிலும் மேம்பட்டது. அந்த அறிவைச் சரியான முறையிலே பயன்படுத்துவதையே இது குறிக்கிறது.
தேவனுடைய கிரியைகள் அனைத்தும் அவருடைய ஞானத்தை வெளிப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, மனிதனுடைய உடற்கூறுகள் வியத்தகுவகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது, அவருடைய ஞானத்தைப் பறைசாற்றும் புகழுரையாகத் திகழ்கிறது.
இரட்சிப்பின் திட்டத்திலே தேவஞானம் காணப்படுகிறது. பாவத்திற்குரிய ஒறப்பு எங்ஙனம் செலுத்தித் தீர்க்கப்பட்டது என்பதை நற்செய்தி தெரிவிக்கிறது. தேவனுடைய நீதி நிலைநிறுத்தப்பட்ட விதம், அவருடைய இரக்கம் நீதியாக வழங்கப்பட்ட விதம், ஆதாம் பாவத்தில் வீழ்ந்துபோகாமல் இருந்திருப்பானாயின் மனிதனுடைய நிலை எப்படியிருக்குமோ அதைக்காட்டிலும் விசுவாசி சிறந்த ஸ்தானத்திற்குக் கொண்டுவரப்பட்ட விதம் ஆகிய யாவையும் நற்செய்தியில் திட்டமிடப்பட்டுள்ளன.
நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிற நிலையில், தேவஞானம் நம்முடைய ஆத்துமாவிற்கு ஆறுதல் அளிக்கத்தக்கபடி இனிமையாகப் பேசுகிறது. தவறே இழைக்காத வகையில் ஞானம் உடையவராக நமது தேவன் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். வாழ்க்கையில் நடக்கும் சிலசெயல்கள் நாம் புரிந்துகொள்வதற்குக் கடினமாக இருப்பினம், அவரால் தவறு செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம்.
அவருடைய வழிநடத்துதலில் நாம் முழுநம்பிக்கை கொண்டிருக்கிறோம். தொடக்கமுதல் முடிவுவரை எல்லாவற்றையும் அவர் அறிவார். நமது அறிவிற்கு முற்றிலம் புலப்படாத வகையில் அவருடைய வழிகள் செம்மையானவை, ஆசீர்வாதத்தை நல்கக்கூடியவை.
அவருடைய வழிநடத்துதலில் நாம் முழுநம்பிக்கை கொண்டிருக்கிறோம். தொடக்கமுதல் முடிவுவரை எல்லாவற்றையும் அவர் அறிவார். நமது அறிவிற்கு முற்றிலும் புலப்படாத வகையில் அவருடைய வழிகள் செம்மையானவை, ஆசீர்வாதத்தை நல்கக்கூடியவை.
கடைசியாக, நாம் ஞானத்தில் வளரவேண்டும் என அவர் விரும்புகிறார். நாம் நன்மைக்கு ஞானிகளாயிருக்கவேண்டும் (ரோ.16:19). நாம் ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் (எபேசி.5:15-16). சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களாகவும், புறாக்களைப் போல கபடற்றவர்களாகவும் நாம் நடந்து கொள்ள வேண்டும் (மத்.10:16).