Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home தினதியானம்

மெய்யான மதிப்பு

Kesaran by Kesaran
May 27, 2011
in தினதியானம்
0
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

மே 27

You might also like

Smith´s Daily Remembrancer – September 5

Smith´s Daily Remembrancer – September 4

Smith´s Daily Remembrancer – September 3

எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? (மத்.23:17)

தேவாலயத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தனது ஆணையை நிறைவேற்ற வேண்டியதில்லையென்றும், தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தனது ஆணையை நிறைவேற்றக் கடனாளியாக இருக்கிறான் என்றும் இயேசு கிறிஸ்து கிறிஸ்துவின் நாட்களில் வாழ்ந்த வேதபாரகரும் பரிசேயரும் கற்பித்தனர். பலிபீடம் மற்றும் காணிக்கை ஆகியவற்றின்பேரில் சத்தியம் பண்ணுகிறதிலும் இதேபோன்று தவறான போதனையை அவர்கள் கற்பித்தனர். பலிபீடத்தின்பேரில் இடுகிற ஆணையைச் செய்யவேண்டியதில்லை, ஆனால் காணிக்கையின் பேரில் இடுகிற ஆணையைத் தவறாமல் நிறைவேற்றவேண்டும் என்பது அவர்கள் வாதம்.

அவர்கள் மதிப்பிடும் முறை முற்றிலும் தவறானது என்று கர்த்தர் எடுத்துரைத்தார். தேவாலயமே பொன்னிற்குச் சிறப்பளிக்கிறது. அதுபோலவே பலிபீடமே காணிக்கைக்கச் சிறப்பளிக்கிறது.

இவ்வுலகில் தேவன் வாசம்செய்யம் இடமாக தேவாலயம் இருந்தது. அவ்விடத்தில் பயன்படுத்தப்பட்ட பொன்னோ எல்லாப் பொன்னிலும் மிகவும் மேன்மையான கனத்தைப் பெற்றது. அது தேவனுடைய வீட்டோடு கொண்டிருந்த சம்பந்தத்தினால், அத்தனிச் சிறப்பைப் பெற்றது. அதுபோன்றே காணிக்கை பலிபீடத்தினால் சிறப்பு பெற்றது. பலிபீடம் தெய்வீக ஆராதனையின் அங்கமாகத் திகழ்ந்தது. எந்தவொரு விலங்கும் அதில் பலியிடப்படுவதைப் பார்க்கிலும் மேலான கனத்தைப் பெறமுடியாது. விலங்குகள் அவற்றின் வாழ்க்கையில் சில நோக்கங்களை உடையவையாக இருந்திருக்குமானால் அவ்வாறு பலியிடப்படுவதையே விரும்பியிருக்கும்.

பாரிஸ் நகரக் கடைவீதியில் மஞ்சள் நிறக் கற்கள் பதித்த பழைய ஆரம் ஒன்றைக் குறைந்த விலைக்கு ஒரு பயணி வாங்கினான். தனது நாட்டிற்குத் திரும்பிச் சென்றவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நியூயார்க் சுங்க அதிகாரிகள் பெரும் பணத்தை வரியாக வசூலித்தனர். அந்த ஆரத்தின் மதிப்பை அறிய விரும்பினபோது அதன் மதிப்பு 25000 டாலர் என்று ஒரு நகைக்கடையிலும் அடுத்த கடையில் 35000 டாலர் என்றும் கூறினர். “ஜோசபைனுக்கு நெப்போலியன் போனபார்ட்டின் அன்பளிப்பு” என்று கண்ணுக்குப் புலப்படாத சிறிய எழுத்துக்கள் அந்த ஆரத்தில் பொறிக்கப்பட்டிருந்ததே அதன் விலைமதிப்பிற்குக் காரணம் என்பதை அவன் பின்னரே அறிந்துகொண்டான். நெப்போலியனுடன் கொண்ட தொடர்பினால் அந்த ஆரம் சிறப்பு பெற்றது.

இதிலிருந்து நாம் அறிவது யாது? நாம் ஒன்றிற்கம் தகுதிபடைத்தவர் அல்லர். ஒன்றையும் நாமாகச் செய்ய இயலாதவர். கர்த்தரோடு நாம் கொண்டிருக்கிற ஐக்கியமும், அவருடைய உழியத்தோடு நாம் வகிக்கும் பங்கும் நம்மைத் தனிச் சிறப்பு அடையச்செய்கின்றன. “கல்வாரியோடு நீங்கள் கொண்டுள்ள தொடர்பு உங்களைப் பற்றிய மிகவும் வியத்தகு மேன்மையாகும்” என்று ஸ்பர்ஜன் கூறியுள்ளார்.

அசாதாரண வகையில் நீங்கள் புத்திகூர்மை உடையவராக அருக்கலாம். அதற்காக நீங்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர் ஆவீர். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்காக நீங்கள் அதனைப் பயன்படுத்தாதவரை, அதனுடைய மிக உயர்ந்த மேன்மையை அது அடையாது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். கிறிஸ்துவே உங்களுடைய அறிவைப் பரிசுத்தப்படுத்துகிறார்.

உங்களுடைய திறமையைப் கண்டு இவ்வுலகம் அதற்குப் பெரிய விலையைக் கொடுக்கலாம். இவ்வுலகம் சபையை அறியாது. ஆனால் அந்தச் சபையே உங்களது திறமையைப் பரிசுத்தப்படுத்தகிறது. உங்களது திறமை சபையைப் பரிசுத்தப்படுத்துவதில்லை.

நீங்கள் பணத்தைச் சேமித்து வைக்கலாம். அல்லது உங்களுடைய சொந்த நலனுக்காகச் செலவிடலாம். அல்லது இறை அரசிற்காகச் செலவிடலாம். கிறிஸ்துவின் நோக்கம் நிறைவேறுவதற்காக நீங்கள் அதைப் பயன்படுத்துவதே அதன் மிகச்சிறந்த பயனாகும். இறை அரசே அச்செல்வத்தைப் பரிசுத்தப்படுத்துகிறது. செல்வம் இறை அரசைப் பரிசுத்தப்படுத்துவதில்லை.

Share30Tweet19
Kesaran

Kesaran

Recommended For You

Smith´s Daily Remembrancer – September 5

September 5, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 5 'நான் புறம்பே தள்ளுவதில்லை' யோவான் 6:37 எவ்வளவு பலத்த விசுவாசியும் சிலவேளை பயத்துக்கு இடங்கொடுக்கிறதுண்டு. தேவன் தனக்காகச் செய்த யாவற்றையும் சந்தேகிக்கிறதுமன்றி, தேவ வசனத்திலுள்ள எந்த வாக்குத்தத்தமும் தனக்குரியதோ என்று கலங்குகிறதுமுண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் முன்னே...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 4

September 4, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 4 'உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷம்' எபேசியர் 1:13 நம்முடைய ரட்சிப்பு பாவத்தினின்றும், சாபத்தினின்றும், தேவகோபத்தினின்றும் உண்டாகும் விடுதலைதான். இது நம்மாலே முடியாது. தேவன் நம்மை இலவசமாய்ப் பரிபூரணமாய், நித்தியமாய் மீட்கும்பொருட்டுத் தம்முடைய சொந்தக் குமாரனை நம்முடைய தன்மையைத்...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 3

September 3, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 3 'என் தேவன் உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார்' பிலிப்பியர் 4:19 இப்படிப் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியருக்கு நிச்சயம் சொல்லுகிறார்; நமக்கும் இப்படியே நிச்சயம் சொல்லுகிறார். அவர்களுக்கு அநேகம் குறைவுகளிருந்தன; நமக்கும் அப்படித்தான். அவர்கள் தேவனைச் சார்ந்திருந்தார்கள்; நாமும்...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 2

September 2, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 2 'மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு' ரோமர் 11:20 விசுவாசிகள் தங்களைக்குறித்து சிலவேளைகளில் எண்ணவேண்டியதற்கு மேலாக எண்ணிச் சோதனையில் விழுகிறார்கள். தங்களுக்கும், மிகவும் நிர்ப்பந்தரான பாவிகட்குமிருக்கிற வித்தியாசம் தேவனுடைய சுத்த இலவசமான கிருபையினால் உண்டாயிருக்கிறதை மறந்துவிடுகிறார்கள். தாங்கள் பலவீனரானதால்,...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 1

September 1, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 1 'மீட்கிறவர்' ரோமர் 11:26 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்கு வேண்டிய ஒத்தாசைசெய்து, அவர்களை மீட்க அபிஷேகம் பெற்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். இதற்காக ஞானம் அறிவென்னும் பொக்கிஷங்கள் அவரிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சகல மாம்சத்தின்மேலும் அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு...

Read moreDetails
Next Post

எல்லாம் வல்ல தேவன்

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?