ஏப்ரல் 29
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபி.11:1).
திருமறையை முழுமனதோடு நம்புது விசுவாசமாகும். தேவனுடைய நம்பகத்தன்மையின் மீது நாம் கொண்டிரு;கும் உறுதியாக அது இருக்கிறது. தேவன் உரைப்பவை உண்மையென்றும், அவர் வாக்களித்தவை நிச்சயமாக நிறைவேறும் என்றும் திடநம்பிக்கை கொள்வதாகவும் அது இருக்கிறது. அடிப்படையில், எதிர்காலத்தைக் குறித்ததாகவும் (நம்பப்படுகிறவை), கண்ணிற்குப் புலனாகாதவற்றைக் குறித்ததாகவும்,(காணப்படாதவை) அது இருக்கிறது.
“விசுவாசத்தினால் காலடி எடுத்து வைப்பது வெற்றிடத்தின் ஆழத்திலே அடிவைப்பது போன்று தோன்றுகிறது, ஆனால் அங்கு காலை வைத்தவுடன் பாறை இருக்கிறது” என்று வைட்டியர் என்பார் கூறியுள்ளார். ஆயின் அது அப்படியல்ல! இருளுக்குள் தாவிக்குதிப்பது விசுவாசமல்ல. மிக உறுதியான ஆதாரத்தை அது கோருகின்றது. அந்த ஆதாரத்தை அது தேவனுடைய திருமறையில் காணவிழைகிறது.
ஏதாவது ஒன்றை நீங்கள் உறுதியாக நம்பினால் மட்டும்போதும், அது நிறைவேறும் என்று தவறான எண்ணம் கொண்டுள்ளனர் சிலர். அது மூட நம்பிக்கையாகும். அதை விசுவாசம் என்று அழைக்க முடியாது. சார்ந்து கொள்வதற்கு தேவனுடைய வெளிப்பாடாகவும், பற்றிக்கொள்வதற்கு அவருடைய வாக்குறுதியாகவும் அது இருக்கிறது. தேவன் வாக்களித்திருப்பாரென்றால், அது எற்கெனவே நடைபெற்றுள்ளது போன்று நிச்சயமானதாகும். எதிர்காலத்தைக் குறித்து அவர் உரைத்திருப்பாராயின், நிச்சயமாக அது நிகழும். எதிர்காலத்தை நிகழ்காலமாகவும், கண்ணுக்குப் புலனாகாதவற்றைக் காணச்செய்வதாதகவும் அது இருக்கிறது என்று கூறலாம்.
தேவனை நம்புவதால் ஆபத்து ஒன்றும் நிகழாது. அவர் பொய்யுரையார், வஞ்சிக்கமாட்டார். எவரும் அவரை வஞ்சிக்க முடியாது. ஒரு மனிதன் பகுத்தறிவுடனும், புத்திக் கூர்மையுடனும், தத்துவ ரீதியாகவும் செய்யக்கூடிய செயல் தேவைன விசுவாசிப்பதேயாகும். படைப்புகள் படைப்பாளரை விசுவாசிப்தைக் காட்டிலும் எது நியாயமானதாக இருக்கமுடியும்? நிகழக்கூடியவை என்பன மட்டுமின்றி, நிகழக்கூடாதவை என்று கருதப்படுபவைகளையும் விசுவாசம் நிறைவேற்றுகிறது. “சாத்தியக்கூறுகள் அனைத்தும் முற்றுப்பெற்ற பிறகே விசுவாசம் செயல்ப்படத் தொடங்குகிறது. சாத்தியமானவற்றில் தேவன் மகிமைப்படுகிறதில்லை. அது நடக்காது என்று கைவிடப்பட்டபிறகு விசுவாசத்தினால் நடத்தேறுகிறது” என்று ஒருவர் உரைத்துள்ளார்.
விசவாச வாழ்க்கையில் இன்னல்களும் இடைய+றுகளும் உண்டாகும் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கடுஞ்சோதனையாலும் வேதனையாலும் தேவன் நம்முடைய விசுவாசத்தைச் சோதித்து அது உண்மையா எனக் கண்டறிகிறார் (1.பேது.1:7). அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதற்கு நெடுநாட்கள் காத்திருக்கவேண்டும். சில வாக்குறுதிகள் நாம் அக்கரை சென்ற பின்னரே நடக்கும். ஆனால், “இன்னல்கள் விசவாசத்தை வளர்க்கும் உணவாகும்” (முல்லர்)
“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்” (எபி.11:6). தேவனை விசுவாசியாதவனோ, அவரைப் பொய்யராக்குகிறான் (1.யோ. 5:10). அவரைப் பொய்யர் என்று அழைக்கிற மனிதரிடத்தில் தேவன் எவ்வாறு பிரியப்படுவார்?