ஏப்ரல் 27
கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்தி சொன்னான் (அப்.11:23).
அறிவாற்றல் மிக்க சில மனிதர்கள், கிறிஸ்துவுக்கு உண்மையற்றவர்களாக இருக்கின்றனர். இருந்தபோதிலும் அவர்களைச் சுற்றி சில கிறிஸ்தவக் கூட்டத்தார் கூடி அடிமைகளைப் போல நடந்துகொள்கிறதைக் காணும்போது அச்செயல் நம்மை அதிhச்சிக்குள்ளாக்குகிறது.
எடுத்துக்காட்டாக ஒரு மனிதரைப் பார்க்கிறோம். இவர் எழுதுவதில் ஆற்றல் மிக்கவர். திருமறையில் காணும் சொற்களுக்கு விளக்கம் அளிப்பதில் நிபுணர். நிகழ்ச்சிகளை மேற்கோள்காட்டி விளக்குவதில் தேர்ந்தவர். எனினும், இயேசு கிறிஸ்து கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்பதை இவர் ஏற்றுக்கொள்கிறதில்லை. கர்த்தர் செய்த அற்புதங்களுக்கு அறிபூர்வமாக அர்த்தம்கொடுத்து அங்கு வெளிப்படுத்தப்படும் தெய்வீகத்தைப் புறக்கணிக்கிறார். இயேசு கிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான உயிர்த்தெழுதலை ஏற்றுக்கொள்கிறதில்லை. என்றாலும் உலக நாயகர்களின் அவையில் இயேசு கிறிஸ்துவையும் ஒருவராக நிறுத்தி, அவருக்குப் புகழ்மாலையை இவர் சூட்டுகிறார். இவரைப் பொறுத்தமட்டில், இயேசு கிறிஸ்து உலக நாயர்களில் ஒருவர். இந்த மனிதரின் செயல்கள் யாவும் தேவனுடைய குமாரனுடைய மேன்மையை இழிவுபடுத்துவதாகவே அமைகின்றன. இந்த மனிதர் கர்த்தருக்கு உண்மையற்றவர் என்பதை அறிவது எளிது.
இப்படிப்பட்ட மனிதர்களை, இவர்களது அறிவாற்றல் கருதி ஆதரவளிப்பது நமக்கு மிக்க அதிர்ச்சியைத் தருகிறது. கிறிஸ்துவின் தெய்வீகத்தை இவர் மறுப்பதைப் பொருட்படுத்தாமல், இவருடைய ஆற்றலை உயர்த்திப் பேசுகின்றனர். இந்த மேதைகளின் கூற்றை மேற்கோள் காட்டுகின்றனர். இப்படிப்பட்டோரோடு கூடிப் பழகுகின்றனர். சிலுவைக்குப் பகைஞரை ஏன் அதரிக்கிறீர்கள் என்று நாம் வினவும்போது, பதில் கூறாது மழுப்புகின்றனர். திருமறையில் காணும் அடிப்படைச் சத்தியங்களைச் சுட்டிக்காட்டி, இவ்வகையில் அறிஞர்களுக்கு எதிராகப் பேச முனையும் விசுவாசிகளை இக்கூட்டத்தார் தாக்குவர்.
அறிஞர்கள் கூட்டத்தில் இரட்சகர் காட்டிக்கொடுக்கப்படுகின்ற தருணங்களில் நீதியுடைய கோபத்தோடு கிறிஸ்தவர்கள் பொங்கியெழ வேண்டிய தருணம் வந்துவிட்டது. அவர்களோடு உடன்பாடு செய்து கொள்ளச் சமயமில்லை. கர்த்தருடைய அள்தத்துவம், கிரியை ஆகியவற்றைக் குறித்து அவர்களோடு பேசி முடிவுசெய்யத் தேவையில்லை. நாம் உறுதியோடு நின்று, தேவனுக்கென்று கணக்கிடப்பட்டவராகக் காணப்படவேண்டும்.
தேவனுடைய சத்தியத்தை ஆபத்து எதிர்நோக்கியிருக்கும் வேளையில் தீர்க்கதரிசிகள் சந்தேகத்தோடு பேசவில்லை. அவர்கள் கர்த்தருக்கு விசுவாசமாயிருப்பதில் தீவிரமாக இருந்தனர். கர்த்தரை மறுத்தவர்களையும் இழிவுபடுத்தினவர்களையும் வசச்சொல்லால் கடுந்துரைத்தனர்.
கர்த்தருடைய மகிமையைக் கொள்ளையிட முயற்சி செய்தோரை அப்போஸ்தலர்களும் எல்லா வகையிலும் எதிர்த்து நின்றனர். இறையில் அறிஞரின் கூட்டத்திற்கு உண்மையாயிருப்பதைக் காட்டிலும், கிறிஸ்துவுக்கு விசுவாசமாயிருப்பதையே மேன்மையெனத் தெரிந்துகொண்டனர்.
தேவகுமாரனுக்கு உண்மையாயிருத்தலை விட்டுவிடுவதைவிட உயிர்விடுவதையே தியாகிகள் தெரிந்துகொண்டனர். மனிதரால் பாராட்டப்படுவதிலும், தேவனால் பாராட்டப்படுவதில் விருப்பம் கொண்டனர்.
எல்லாவற்றிலும் கிறிஸ்துவுக்கு உண்மையாயிருப்பது நமது பொறுப்பாகும். எல்லாவற்றிற்கும் முந்தினபேறானவருக்குரிய ஸ்தானத்தை மறுத்துரைக்கும் அனைவரையும் எதிர்த்து நிற்பதே நமக்குத் தகும்.