ஏசா.20:1-6, 21:1-17
என் ஊழியக்காரனான ஏசாயா வஸ்திரமிழந்தான். ஏசாயா ஒரு அடையாளமாக வைக்கப்பட்டான். சிறைப் பிடித்தலின் அடையாளமாக வெறுங்காலுடன் வஸ்திரமிழந்தவனானான். அஸ்தோத்திடம் உதவி கேட்டாலும் அசிரியாவுக்கு விரோதமாய் புரட்சி செய்தாலும் யூதாவிற்கு ஆபத்து ஏற்படும். கி. மு. 711-ல் உள்ள சார்கோனின் கல்வெட்டுப்படி, ஏசாயா முன் கூறியது நிறைவேறியது. இறைவனும் தெளிவாக்குகிறார். எகிப்தியர் சிறைபிடிக்கப்படுவர் என்பதின் அடையாளமாக ஏசாயா தன மேலாடையைக் களைந்தார். எகிப்தின்மேல் நம்பிக்கை வைத்தவர்கள் அதன் பலவீனத்தை அறிந்து கொள்வர். நாம் மனிதபெலன், பொருட்பெலன், பணபெலத்தைச் சார்ந்ததுண்டா? எல்லா சூழ்நிலைகளிலும் தேவனது பெலன் அளவற்றது. அவரது தெய்வீக உதவி இல்லாவிடில் நாம் பெலனற்றவராகிறோம். காவல் கோபுரத்தில் நான் நிற்கிறேன். நம்மைக் கலங்கச் செய்யும் சூழ்நிலைகளில் இரக்கத்தில் மாறாத கர்த்தரை உறுதியாய் நம்புவோம், கர்த்தரின் ஊழியக் காரனாயிருக்க வேண்டும். விழித்திருந்து பணிசெய்ய வேண்டும். கஷ்டங்கள் இருள் எனக் குறிப்பிடப்படும். நமது ரட்சகர் ஒருவனும் கிரியை செய்யக் கூடாத ராக்காலம் வருகிறது எனக் கூறுகிறார் ஏசு கிறிஸ்துவின் அரசாட்சிக்காக உழைக்கிறாயா? இறைவன் யாவற்றையும் புதிதாக்குகிறவர் என்ற நம்பிக்கையுடன் உழைக்கிறாயா?