ஏப்ரல் 11
இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து. நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள். என்று சொல்லுங்கள். (மத்.28:12-13)
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த சிறிது நேரத்திற்குள்ளாக, அந்த அற்புதத்தை மறைக்க அவருடைய எதிரிகள் ஒரு கட்டுக்கதையை உருவாக்கினர். அவருடைய சீடர்கள் இரவில் கல்லறையைத் திறந்து அவருடைய சரீரத்தைக் திருடிச் சென்றனர் என்னும் பொய்க் கதையைக் கட்டுவதைக் காட்டிலும் பெரிதாக அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. (இயேசு கிறிஸ்து மரிக்கவில்லை, மயக்கமே அடைந்தார் என்ற கதை பல நூற்றாண்டுகள் கழித்தே கட்டப்பட்டது). மற்றக் கதைகளைப் போலவே இந்தத் திருட்டுக் கதையும் பல கேள்விகளை எழுப்பக்கூடிய அவலநிலைக்குரியதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக:
காலியான கல்லறையைக் குறித்த உண்மையைக் காவலர்கள் முதலாவது கூறியபோது பிரதான ஆசாரியர் ஏன் கேள்விகேட்கவில்லை? அதனை அவர்கள் நம்பினார்கள். அதை எப்படியாவது திரித்துக் கூறவேண்டும் என்று அவசரப்பட்டனர். கவனமுள்ளவர்களாகக் காவல்காக்க வேண்டிய காவலர் ஏன் உறங்கினர்? வேலை நேரத்தில் உறங்குவதற்கு ரோமர் தருகிற தண்டனை மரணம் என்றாலும் தண்டனையிலிருந்து அவர்களைத் தப்புவிப்பதாக ஆசாரியர் வாக்களித்தனர். ஏன்?
ஒரே நேரத்தில் எல்லாச் சேவகர்களும் எப்படி உறங்கினர்? சிறிது நேர உறக்கத்திற்காக மரணம் அடையவும் ஆயத்தமாயினரோ? காவலர் விழிப்படையாதபடி எவ்வாறு சீடர்கள் கல்லைப் புரட்டினார்கள். சப்தமின்றி அப்பெருங்கல்லை புரட்ட முடியாது. சீடர்கள் எவ்வாறு கல்லைப் புரட்டியிருக்க முடியும்? கல்லறையின் வாசலில் உள்ள ஒரு சிறிய பள்ளத்திற்குள்ளாக விழும்படியாக அந்தக்கல் வைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து புரட்டுவது எளிதன்று. ரோம முறைப்படி, கல்லறையைப் “பத்திரப்படுத்தினார்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது.
தங்களுடைய ஜீவனைக் காத்துக்கொள்ளும்படி பயந்து ஓடிய சீடர்கள் ஓரிரு நாட்களுக்குள் ரோமக் காவலாளிகளை எதிர்க்கவும், கல்லறையிலிருந்து திருடவும் தைரியம் கொண்டார்கள் என்பதை எவ்வாறு நம்பமுடியும்? அவ்வகையான குற்றம் பெருந்தண்டனைக்குரியது என்பதை அவர்கள் அறிவார்கள்.
காவலர்கள் உறங்கிவிட்டார்களெனில், சீடர்கள் களவாடியதை எவ்வாறு அறிவார்கள்? சீடர்கள் திருடினார்களெனில், சவத்துணியை நீக்கவும் தலைச் சீலையைச் சுற்றி வைக்கவும் நேரத்தை எடுத்துக்கொண்டதன் காரணமென்ன? (லூக்.24:12, யோ.20:6-7). சரீரத்தைச் சீடர்கள் திருடுவதற்கான காரணம் என்ன?
ஒர காரணமும் இல்லை. அவர் உயிர்த்தெழுந்தார் என்று கேள்விப்பட்ட சீடர்கள் வியப்படைந்தனர். நம்புவதற்கு மனமற்றிருந்தனர்.
கடைசியாக, பொய்யென்று அறிந்து, தங்களடைய வாழ்வைப் பயணமாக வைத்து உயிர்த்தெழுதலைக் குறித்து கனம்மிக்க சீடர்கள் எதற்காகப் பிரசங்கிக்க வேண்டும்? “பொய்க்காக மனிதர்கள் மரிக்கமாட்டார்கள்” என்று பால் லிட்டில் என்பார் கூறியுள்ளார். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுத்தார் என்று சீடர்கள் மனதார நம்பினர்.
கர்த்தர் உயிர்த்தெழுந்தார்! ஆம் உண்மையாகவே அவர் உயிர்த்தெழுந்தார்.