யோசுவா 9:1-27
பிற மக்களை, தேவ பிள்ளைகளையே வெவ்வேறான வழிகளில் ஏமாற்றும் உலகத்தில் வாழ்கிறோம். யோசுவாவும் இஸ்ரவேலரும் கிபியோனியரால் ஏமாற்றப்பட்டனர். இஸ்ரவேலருக்கு வெற்றிகள் மத்தியில் இது ஒரு தோல்வி. நமக்கு சில முக்கிய எச்சரிப்புகள் இதில் உண்டு. அசதியாயிராதே. சுற்றியுள்ள மக்கள் தேவ செயலை உணர்ந்து, இஸ்ரவேலருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எல்லாம் நன்றாக இருக்கும்போது, நாம் அசதியாயிருக்கக் கூடாது. கர்த்தரைப் புறக்கணிக்காதே (14): இதுவே இஸ்ரவேலரின் பெரும்குற்றமாகும். அவர்கள் புத்தியான தீர்மானம் செய்த போதிலும், கர்த்தரிடம் அதைக் குறித்து கேட்கவில்லை. நம் உணர்ச்சிகளை சார்ந்து தீர்மானம் செய்வதால் பெரிய தவறுகள் செய்ய நேரிடும். இஸ்ரவேலர் வாக்கைக் காத்துக் கொண்டனர். ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை. (உபாகமம் 7:2),ஒப்பந்தம் செய்யுமுன் சிந்தி (16): நமது வேலை திருமணம், வெவ்வேறு குழுக்களில் சேர்தல் ஆகிய ஒப்பந்தங்கள் செய்யுமுன் கவனமாகச் சிந்தித்தல் அவசியம். தலைவர்களுக்கு விரோதமாக முறுமுறுக்காதே (18). சிக்கல்கள் வரும்போது, அதில் நமது பங்கு என்ன என்று சிந்தியாமல் தலைவர்களைக் குற்றப்படுத்த ஏவப்படலாம். யோசுவாவின் திறமையாலும், கிபியோனியர் கர்த்தருக்குச் சேவை செய்ய ஆயத்தமாயிருந்ததாலும் பிரச்சனை சுலபமாகியது (23-27), எப்போதும அப்படியிராது.