Monday, December 1, 2025
Tamil Bible Blog
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home தினதியானம்

மனம்வருந்துமுன் காட்டும் தோழமை

Kesaran by Kesaran
March 20, 2011
in தினதியானம்
0
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

மார்ச் 20

You might also like

Smith´s Daily Remembrancer – September 5

Smith´s Daily Remembrancer – September 4

Smith´s Daily Remembrancer – September 3

தகப்பனே… நான் பாவஞ்செய்தேன் (லூக்.15:21)

கெட்டகுமாரன் மனம் வருந்தினவனாகத் திரும்பி வருவதற்கு முன்னர், அவனுடைய தகப்பன் அவனகை; காண ஓடிச்செல்லவில்லை, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தமும் கொடுக்கவில்லை. மனந்திரும்புதல் முதலாவது நிகழ்ந்தாலொழிய மன்னிப்பை செயல்படுத்துவது நீதியுடையது என்று கருதமுடியாது. “அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக” என்பதே திருமறைக் கொள்கையாகும் (லூக்.17:3).

தொலைதூரத்தில் கெட்டகுமாரன் அலைந்து திரிந்தபோது, அவனுடைய தகப்பன் உதவியை அனுப்பியதாக எவ்விதக்குறிப்பும் இல்லை. அவ்வாறு செய்திருப்பானாயின், எதிர்த்து நின்றவனின் வாழ்க்கையில் தேவன் நடத்திய கிரியைக்கு அது தடையாக இருந்திருக்கும். தான்தோன்றித் தனமாகத் திரிந்தவனைத் தாழ்வான நிலைக்குக் கொண்டுவரச் செய்வதே கர்த்தருடைய இலக்காக இருந்தது. அவன் தாழ்வான நிலைக்குச் செல்வதற்கு முன்னர் மேல்நோக்கிப் பார்க்கமாட்டான். அப்பொழுதுதான் அவனுடைய சுயம் ஒரு முடிவிற்கு வரும் என்பதை அவர் அறிவார். அலைந்துதிரியும் கெட்டகுமாரன் பன்றியின் உணவாகிய தவிட்டை நோக்கி எவ்வளவு விரைவாகச் செல்கிறானோ, அவ்வளவு விரைவாக நொறுங்கிய உள்ளத்தைப் பெறுவான். ஆகவே, தன் குமாரனைக் கர்த்தரிடம் ஒப்புவிப்பது தகப்பனுக்கு அவசியமாயிற்று. நெருக்கடியான கடைசி எல்லைவரை சென்று திரும்பி வருவான் எனக் காத்திருந்தான்.

பெற்றோர்கள், குறிப்பாக, தாய்மார்கள் இவ்வாறு நடந்துகொள்வது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். தேவன் அனுப்பும் ஒவ்வொரு இக்கட்டான கட்டத்திலிருந்தும் கலகம் செய்யும் மகனையோ அல்லது மகளையோ விடுவிப்பதே பெற்றோரின் இயற்கையான இயல்பாகும். இவ்வாறு பெற்றோர்கள் நடந்து கொள்வதினால் கர்த்தருடைய நோக்கம் தடைபட்டு, அவர்களுக்குப் பிரியமானவர்களுடைய வாழ்வில் வேதனை தொடர்கிறது.

“தவறிழைக்கிறவர்களிடத்தில் நாம் காட்டும் உண்மையான அன்பு யாதெனில், அவர்கள் தவறிழைக்கிறபோது நாம் காட்டும் தோழமையல்ல. மாறாக, எல்லாவற்றிலும் நாம் கர்த்தருக்கு உண்மையோடு நடந்துகொள்வதேயாகும் என்று ஸ்பர்ஜன் ஒருமுறை கூறியுள்ளார். ஒருவன் தன்னுடைய பொல்லாப்பில் தொடர்ந்து நிலைத்திருக்கும்போது செல்லங்கொடுத்துக் கெடுப்பது உண்மையான அன்பல்ல. ஒருவரைக் கர்த்தரிடத்தில் திரும்பச் செய்து அவருக்காக மன்றாடுவதே உண்மையான அன்பாகும். “கர்த்தாவே, என்ன விலையானாலும் சரி, அவரைப் புதுப்பித்து மீண்டும் நல்வழிப்படுத்துவீராக” என்றே மன்றாடவேண்டும்.

மனவருத்தம் அடைவதற்கு முன்னர் அப்சலோமைத் திரும்பி அழைத்துவந்தது தாவீது செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும். அதன் பிறகு சிறிது காலத்திற்குள்ளாகவே, மக்களுடைய உள்ளங்களை அப்சலோம் வெற்றிகொண்டான். அவர்களுடைய ஆதரவைப் பெற்றவன் தன்னுடைய தகப்பனுக்கு எதிராகக் கலகம் செய்யத்திட்டமிட்டான். கடைசியில், தனது தகப்பனை எருசலேமை விட்டுத் துரத்திவிட்டு, தன்னையே அரசனாக அவன் ஸ்தானத்தில் முடிசூட்டிக்கொண்டான். தாவீதைக் கொன்றுபோடும்படி பெரும் படையுடன் அப்சலோம் வந்தபோதும்கூட, அவனை உயிரோடு விட்டுவைக்கும்படித் தன் வீரர்களுக்கு தாவீது கட்டளை கொடுத்தான். இதைக் காட்டிலும் மேலான நினைவு கொண்ட யோவாப், அப்சலோமைக் கொன்றுவிட்டான்.

தங்களுடைய மகனையோ மகளையோ பன்றிகள் வாழும் பட்டிக்கு தேவன் கொண்டுபோகிறதினால் உண்டாகும் வலியைப் பொறுத்துக் கொள்ளும் பெற்றோர், பின்னால் நிகழக்கூடிய மாபெரும் வேதனையிலிருந்து தப்புவர்.

Share30Tweet19
Kesaran

Kesaran

Recommended For You

Smith´s Daily Remembrancer – September 5

September 5, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 5 'நான் புறம்பே தள்ளுவதில்லை' யோவான் 6:37 எவ்வளவு பலத்த விசுவாசியும் சிலவேளை பயத்துக்கு இடங்கொடுக்கிறதுண்டு. தேவன் தனக்காகச் செய்த யாவற்றையும் சந்தேகிக்கிறதுமன்றி, தேவ வசனத்திலுள்ள எந்த வாக்குத்தத்தமும் தனக்குரியதோ என்று கலங்குகிறதுமுண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் முன்னே...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 4

September 4, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 4 'உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷம்' எபேசியர் 1:13 நம்முடைய ரட்சிப்பு பாவத்தினின்றும், சாபத்தினின்றும், தேவகோபத்தினின்றும் உண்டாகும் விடுதலைதான். இது நம்மாலே முடியாது. தேவன் நம்மை இலவசமாய்ப் பரிபூரணமாய், நித்தியமாய் மீட்கும்பொருட்டுத் தம்முடைய சொந்தக் குமாரனை நம்முடைய தன்மையைத்...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 3

September 3, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 3 'என் தேவன் உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார்' பிலிப்பியர் 4:19 இப்படிப் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியருக்கு நிச்சயம் சொல்லுகிறார்; நமக்கும் இப்படியே நிச்சயம் சொல்லுகிறார். அவர்களுக்கு அநேகம் குறைவுகளிருந்தன; நமக்கும் அப்படித்தான். அவர்கள் தேவனைச் சார்ந்திருந்தார்கள்; நாமும்...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 2

September 2, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 2 'மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு' ரோமர் 11:20 விசுவாசிகள் தங்களைக்குறித்து சிலவேளைகளில் எண்ணவேண்டியதற்கு மேலாக எண்ணிச் சோதனையில் விழுகிறார்கள். தங்களுக்கும், மிகவும் நிர்ப்பந்தரான பாவிகட்குமிருக்கிற வித்தியாசம் தேவனுடைய சுத்த இலவசமான கிருபையினால் உண்டாயிருக்கிறதை மறந்துவிடுகிறார்கள். தாங்கள் பலவீனரானதால்,...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 1

September 1, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 1 'மீட்கிறவர்' ரோமர் 11:26 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்கு வேண்டிய ஒத்தாசைசெய்து, அவர்களை மீட்க அபிஷேகம் பெற்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். இதற்காக ஞானம் அறிவென்னும் பொக்கிஷங்கள் அவரிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சகல மாம்சத்தின்மேலும் அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு...

Read moreDetails
Next Post

மனிதனின் தீமை தேவனின் மகிமை

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?