பெப்ரவரி 8
என்னோட இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான் (மத்.12:30).
பரிசேயர்களைக் குறித்தே இயேசு கிறிஸ்து இவ்வண்ணம் கூறினார். அவர்கள் மன்னிக்கப்படாத குற்றத்தைச் செய்த சிறிது நேரத்திற்குள்ளாகவே இச்சொற்களை அவர் கூறினார். அதாவது கிறிஸ்து செய்த அற்புதங்களுக்குப் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலின் வல்லமையே காரணம் என்று பரிசேயர் கூறினர். உண்மையில் அவ்வற்புதங்கள் தூய ஆவியானவரின் வல்லமையால் செய்யப்பட்டவை. அவரை இஸ்ரவேலின்; மேசியாவாகவும், உலக இரட்சகராகவும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பது திண்ணம். அவர்கள் எடுத்த முடிவு கிறிஸ்துவுக்கு ஆதராவாக இல்லாமல் எதிராகவே இருந்ததது. அவரோட சேர்ந்து சேவைபுரிவதற்கு மாறாக அவருக்கு எதிராகச் செயல்புரிந்தனர்.
இயேசு கிறிஸ்துவையும் அவருடைய கிரியையையும் ஒரு மனிதன் ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லையேல் மறுக்கவேண்டும். இரண்டிற்கும் நடுநிலையை அவனால் வகிக்க முடியாது. அவனால் மதிற்மேல் பூனையாகச் செயல்பட முடியாது. ஓன்று கர்த்தரின் பக்கம் இருக்கவேண்டும் அல்லது கர்த்தருக்கு எதிராக இருக்கவேண்டும். என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்று சொல்கிறவன் ஏற்கெனவே ஒரு முடிவை எடுத்தவனாயிருக்கிறான் !
கிறிஸ்துவைக் குறித்த சத்தியங்களை எக்காரணத்திற்காகவும் விட்டுக்கொடுக்க இயலாது. கிறிஸ்தவத்தை வேதாகமத்தில் காண்கிறபோது, மக்களிடையே சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. என்றாலும் இயேசு கிறிஸ்துவைக் குறித்த சத்தியங்களில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இருக்கமுடியாது. இதனை யு.று டோசர், „ பேசி உடன்பாடுகொள்கிற பிரச்சனையல்ல இது!“ என்று நமக்கு நினைவூட்டுகிறார். இயேசு கிறிஸ்துவின் தெய்வீகம், அவர் கன்னியின் வயிற்றில் பிறந்தது, அவரது உண்மையான மனிதத் தன்மை, பாவமற்ற பண்பு, பாவிகளின் பதில் ஆளாக அவர் மரணம் அடைந்தது, அவர் சரீரத்தில் உயிர்த்தெழுந்தது, தேவனுடைய வலது புறத்திற்கு ஏறிச்சென்றது, அவருடைய இரண்டாம் வருகை ஆகியவற்றில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இருக்கமுடியாது. மேற்கூறிய அடிப்படை உபதேசங்களில் ஒருவன் ஐயம் கொண்டிருப்பானாயின் அவன் அரைகுறை இரட்சகரைத்தான் பெறுவான். அவனுக்கு அவர் உண்மையிலேயே இரட்சகராக இருக்கமாட்டார். அவன் பெற்றதும் இரட்சிப்பில்லை.
„நீங்கள் கிறிஸ்துவைக் குறித்து எத்தகைய எண்ணம் கொண்டிருக்கிறீர்கள் என்பது, நீங்கள் எவ்வகை நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளத்தக்க சோதனையாக இருக்கிறது. அவரை நீங்கள் சரியானமுறையில் அறிந்திருக்கவில்லையென்றால், பிறவற்றில் நீங்கள் நேர்மையாக இருக்கமுடியாது. உங்களுடைய கண்ணோட்டத்தில் அவர் அன்பராகக் காட்சியளிப்பாரென்றால் நீங்கள் பெறுவது இரக்கம். இல்லையெனில் நீங்கள் பெறுவது தேவகோபம். „தேவன் நியமித்தது இதுவே“ என ஒரு கவிஞர் கூறியுள்ளார்.