முன்னறிவிப்பு: தானி.9:25
இப்போதும் நீ அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழுவாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்.
நிறைவேறுதல்
தீர்க்கதரிசனங்களை விளக்குகையில் ஒரு நாள் ஒரு வருடத்தைக் குறிக்கும்.. ஒரு வாரம் என்பது ஏழு நாள். எபிரெயருடைய கணக்குப்படி ஒரு வருடத்திற்கு 360 நாட்கள்.
அர்த்தசஷ்டா அரசன் அரியணை ஏறியது கி.மு. 465 ம் வருடம் என்று சரித்திர ஆசிரியர் கூறுகின்றனர். அப்படியென்றால் அர்த்தசஷ்டாவின் 20ம் வருடத்திய ஆளுகையில் (கி.மு.445ல்) எருசலேமை எடுப்பித்துக் கட்டளை பிறப்பித்திருக்கவேண்டும் (நெகே.2:1-8).
தானியேல் 9:25ல் குறிப்பிட்டிருக்கும் 7 வாரமும் 62 வாரமும் = 69 வாரம் + 7 நாட்கள் = 483 நாட்கள் அல்லது 483 தீர்க்கதரிசன வருடங்கள் அல்லது 1,73,880 சாதாரண நாட்கள்.
நமது வருடப் பிறப்பிற்குச் சமமான யூத வருடப் பிறப்பு மார்ச் 14ம் தேதி.
கி.மு. 445 மார்ச் 14ம் தேதி முதல் 1,73,880 நாட்களைக் கணக்குப் பார்த்தால் கி.பி. 31 ஏப்ரல் மாதம் 6ம் தேதி வருகிறது. அதோடு கி.மு. 1, கி.பி.1 என்பதை ஒரே வருடமாக எடுத்துக்கொண்டால், கி.பி.32ல் மேசியாவின் வருகையை (இராஜாவாக) எருசலேமுக்குப் பவனியாக போன தேதியைக் குறிக்கும் (சக.9:9, லூக்..19:28-44).
இவ்விதமாக தானியேல் தீர்க்கதரிசி மேசியா வெளிப்படும் காலத்தைக் குறித்து முன்னறிவித்து, இயேசு கிறிஸ்து எருசலேமுக்குச் சமாதானக் கர்த்தராக பவனி வந்து தம்மை வெளிப்படுத்திய சமயம் நிறைவேறியது.