மே 26
பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். (1.சாமு.15:22).
அரசனாகிய சவுலுக்கு தேவன் கொடுத்த கட்டளைகள் மிகத்தெளிவாக இருந்தன. அமலேக்கியரும் அவர்களுடைய உடமைகள் யாவும் அழிக்கப்படவேணஇடும். அந்த உடமைகளைக் கொள்ளைப் பொருட்களாகக் கொள்ளாமல், ஒன்றுவிடாமல் எலஇலாம் அழிக்கப்படவேண்டும். ஆனால் நடந்தது என்ன? அரசனாகிய ஆகாகையும் முதல் தரமான மந்தையையும் கொல்லாமல் சவுல் விட்டுவைத்தான்.
அடுத்தநாள் காலையில் சாமுவேல் சவுலைக் கில்காலில் சந்தித்தபோது, தான் கர்த்தருடைய சொற்களின்படி அனைத்தையும் செய்துமுடித்ததாக சவுல் உறுதியுடன் பதிலுரைத்தான். ஆனால் அதே நேரத்தில் கொல்லைப்புறத்திலிருந்து இன்னிசைப்பாடல் ஒலித்தது. ஆடுகளும் மாடுகளும் சத்தமிட்டன. சவுலுக்கு இக்கட்டான சூழ்நிலை.
எல்லா மந்தையையும் சவுல் கொன்றுபோட்டிருந்தால், எங்ஙனம் ஆடு சத்தமிடும் என்பதே சாமுவேலின: கேள்வி. சவுலோ, தனது கீழ்ப்படியாமையை மறைக்க முயற்சி செய்தான், மக்களைக் குறைகூறினான், சமயப்பற்றின் அடிப்படையில் காரணங்கள் கூறினான். “ஜனங்கள் ஆடுமாடுகளில், நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்” என்பதே அவன் உரைத்த பதில்.
அதன்பிறகே, “பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். இரண்டகம் பண்ணுதல் பில்லி சூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம் பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது” என்று தேவனுடைய தீர்க்கதரிசி இடிமுழக்கமெனக் கடிந்துரைத்தான்.
சடங்குகள், பலிகள், காணிக்கைகள் யாவற்றையும் விடக் கீழ்ப்படிதல் மிகவும் இன்றியமையாதது. தங்களுடைய தாயார் வாழ்ந்த நாட்களில், அவருக்குக் கீழ்ப்படியாமல் ஏளனமாய் நடத்தின பிள்ளைகள் சிலரை எனக்குத் தெரியும். அவர்கள் தங்களுடைய தாயைப் பல ஆண்டுகள் எதிர்த்து நின்று அவமதித்தனர். ஆனால், அந்தத் தாய் இறந்தபோது, சரீரத்தை ஆடம்பரமாக அலங்கரித்தனர். அவர்கள் செய்த பாவத்திற்குப் பரிகாரம் தேடி அவர்கள் செய்த இச்செய்கை பயனற்றதும் வெறுக்கத்தக்கதுமாயிருக்கிறது.
வேதத்திற்க முரணான பதவியையும், நண்பர்களையும் கொண்டிருப்போர் அது சரியானதே என்றும், அதன் வாயிலாக பரந்த செல்வாக்கை அடையலாம் என்றும் வாதிடுவார்கள். பகுத்திறவுபோலத் தோன்றும் இப்படிப்பட்ட வாதங்களால் தேவன் ஏமாறமாட்டார். நமது கீழ்ப்படிதலையே அவர் விரும்புகிறார். நமக்கு எங்கே செல்வாக்கு வேண்டும் என்பதை அவர் அறிவார். உண்மை யாதெனில் நமது கீழ்ப்படியாத செயல்கள், நமது செல்வாக்கு ஆகியவை எதிரான விளைவுகளையே உண்டாக்கும். நமது கர்த்தரோடு ஐக்கியம் கொண்டவர்களாக நாம் நடப்பது மற்றவர்களிடம் தெய்வீகத் தன்மையுள்ள விளைவுகளை உண்டாக்கும்.
“கீழ்ப்படியாமல் செலுத்துகிற காணிக்கைகள் தீட்டானவை” என்று வில்லியம் கார்னர் என்பார் கூறியுள்ளார். பக்தி, சமயம் ஆகிய காரணங்களைக் கூறி நமது கீழ்ப்படியாமையை மறைக்க முயன்றால் நமது பலிகள் இன்னும் கீழ்த்தரமானதாகக் காணப்படும். தேவன் கண்களை மூடிக்கொள்வதில்லை.