முன்னுரைப்பு: ஏசாயா 9:7
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை. சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
நிறைவேறுதல்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை விரோதித்த யூதரிடம் சொன்னது:
யோவான் 5:30
நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
தான் பிதாவின் சித்தப்படி நீதியை நிலைநாட்டினார் என்பதைத்தான் யூதருக்கு எடுத்துக்காட்டி ஏசாயாவின் முன்னறிவிப்பை ஊர்ஜிதப்படுத்தினார்.