முன்னுரைப்பு : ஏசாயா 11:1,3-4
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும். அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின்கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
நிறைவேறுதல்: மத்தேயு 22:16
தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
இயேசு கிறிஸ்துவைப் பகைத்த வேதபாரகரும், பரிசேயரும், அவர் சத்தியமுள்ளவர், முகதாட்சண்யம் இல்லாத நேர்மையுள்ளவர் என்று தங்கள் வாயினாலே அறிக்கைபண்ணி, ஏசாயாவினால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்கள்.
இயேசு தமது பிதாவின் சித்தத்திற்குக் கடைசிவரை கீழ்ப்படிந்து சிலுவை மரணத்திற்கும் தன்னை ஒப்புக் கொடுத்ததினால் ஏசாயா 11:3ம் வசனத்தை நிறைவேற்றினார்.