பெப்ரவரி 21
என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன். (2.இராஜா.4:13).
சூனேம் ஊரில் வசித்த கனம் பொருந்திய பெண்மணி விருந்தோம்பலில் சிறந்தவள். அவ்வூரின் வழியாக எலிசா பயணம் மேற்கொண்டபோதெல்லாம் அவனுக்கு விருந்து பரிமாறினாள். மேலும் அவன் தங்குவதற்குப் படுக்கை அறை கட்டும்படித் தன் கணவனுக்கும் ஆலோசனை நல்கினாள். நற்பண்புகள் மிக்க நங்கைக்கு நன்மைசெய்ய விரும்பினான் எலிசா. அரசனிடமோ படைத் தலைவனிடமோ ஏதேனும் பரிந்துரைக்க வேண்டுமோ என வினவினான். “என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன்“ என்று பாங்குடன் பதிலுரைத்தாள் சூனேம் பெண்மணி. “என் வாழ்க்கை மகிழ்ச்சி மிக்கதாக இருக்கிறது” என்பதே அதன் பொருள். “என்னோடு வாழும் எளிய மக்களிடம் அன்புகூருகிறேன், மேன்மக்களாகக் கருதப்படுகிறவர்களுடன் உறவுகொண்டாட எவ்வித விருப்பமும் எனக்கில்லை” என்பதே அவளுடைய சொற்களின் பொருளாயிருந்தது. உண்மையாகவே அப்பெண் ஞானம் மிக்கவள். புகழ்ச்சியும், செல்வமும், அதிகாரமும் உடையவர்களோடு பழகுவது மனநிறைவைத் தரும் என்று எண்ணுவோர், உலகத்தில் சிறந்தவர்கள், மெய்யாகவே சமுதாயத்தின் முன்னிலையில் இருக்கமாட்டார்கள் என்னும் உண்மையைக் கற்றறிய வேண்டும்.
நற்செய்திப் பணியினை மேற்கொண்டு, உலகினில் பெரும் புகழும் பெற்ற சிலரை நான் அறிந்திருக்கிறேன். ஆயினும், அன்னாரது அனுபவங்கள் நமக்குப் பெரும் ஏமாற்றத்தையே வருவிக்கின்றன. கிறிஸ்தவப் பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரங்கள் வெறும் மதி மயக்கமே ஆகும். சிலரைத் தெரிந்துகொள்ளலாம் என்று எனக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படுமாயின், தாழ்மையுடைய, தெய்வீக குணம்படைத்த, உறுதிப+ண்ட மனிதர்களையே நான் தெரிந்துகொள்வேன். இவ்வுலகினில் அறியப்படாதவராயினும் அவர்கள் விண்ணுலகில் நன்கு அறியப்பட்டவர்கள்.
இதற்கொத்த கருத்தினை விளம்பும் யு.று. டோசர், “பரிசுத்தவான்களை நான் நம்பகிறேன். இன்றைய நாட்களில் பலதரப்பட்ட கிறிஸ்தவர்கள் உள்ளனர். மனம்மாறிய திரையுலகக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தங்கள் பெயரை முன்நிறுத்தும் திருத்தொண்டர்கள் பலரை நான் அமெரிக்காவிலும், கனடாவிலும் கண்டிருக்கிறேன். அவர்கள் யாவரும் உண்மையான மனமாற்றத்திற்கு வெகு தொலைவில் நிற்கின்றனா. நான் மெய்யான பரிசுத்தவான்களைக் காணவிழைகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலித்துக் காட்டுவோரைக் காண வாஞ்சை கொண்டுள்ளேன். மனிதனின் நெஞ்சினில் கர்த்தரின் அழகு மிளிரவேண்டும். இங்ஙனம் வாழும் பரிசுத்தவான் காந்தத்தைப்போலச் செயல்ப்படுகிறான். மார்தட்டித் தம்பட்டம் அடிக்கும் சமயக்காவலர், அறங்காவலர் அகியோரைக் காட்டிலும் அவன் மேன்மையானவன்” எனக் கூறியுள்ளார்.
சார்ல்ஸ் சிமியோனும் இக்கருத்தை இவ்வாறு வலியுறுத்துகிறார்: „ என் வாழ்வின் தொடக்கமும் முதல் இந்நேரம் வரை உலகில் சிறந்தவர்களுடன் ஈடுபாடு உடையவனாக இருக்கிறேன். கர்த்தர் நிமித்தம் அவர்கள் ஒவ்வொருவரும் எனக்குத் தயை பாராட்ட அயராது முயற்சி செய்கின்றனர்.
“என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன்“ என்னும் சூனேம் பெண்மணியின் சொற்களில் ஆவிக்குரிய கருத்து வண்ண மலர்த் தோட்டத்தைப் போன்று மிளிருவதைக் கண்டு போற்றுவோம்.