இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும் (1.யோ.1:7)
இளைஞன் ஒருவன் ஓர் உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து தவறிக் கீழே விழுந்துவிட்டான். உடல் முழுவதும் காயமுற்று இரத்தம் பெருக்கெடுத்ததால் அவன் மரணத்தருவாயிலிருந்தான். மருத்துவரும் தன்னால் எதுவும் செய்யவியாலது என்று கூறிவிட்டார். அவனது எலும்புகள் முறிந்திருந்தால் சரிக்கட்டலாம். நோய்வாய்ப்பட்டிருந்தால் மருந்து கொடுத்து சுகமாக்கலாம். ஆனால், அவன் இரத்தமனைத்தையும் இழந்துவிட்டான். இரத்தம் இல்லாவிட்டால் உயிரை இழப்பது நிச்சயம். உட்செலுத்தப்படவேண்டிய இரத்தம் என்னிடத்தில் இல்லையே என்று அங்கலாய்த்தார் மருத்துவர். என் மகனைக் காப்பாற்ற வழி இல்லையா என்று தந்தை கதறியபோது, யாராவது தனது இரத்தத்தைக் கொடுக்க, முன்வந்தால் அவன் உயிர்பிழைப்பான் என்றார் மருத்துவர். தன் மைந்தன் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பு காரணமாகத் தன் செர்த இரத்தத்தை அவனுக்காகக் கொடுத்தச் சித்தமானான் அத்தகப்பன். அவன் உடம்பிலிருந்த இரத்தம் மகனின் உடலுக்குள் செலுத்தப்பட்டது. சில மணி நேரத்திற்குள் முதியவனான அத்தகப்பன் பெலவீனமுற்று மரித்தான். ஆனால் மகன் பிழைத்துக்கொண்டான். தன்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, தன் மகனுக்கு வாழ்வளித்தது அத்தந்தையின் பேரன்பு. மலையிலிருந்து விழுந்து காயமுற்று இரத்தத்தை இழந்தவனைப்போல, நாமும் பரிசுத்தத்தின் உயிர்விலிருந்து பாவ் படுகுழியில் வீழ்ந்து ஆன்மீக வாழ்வை இழக்கிறோம். நமக்காக கிறிஸ்து தம புனித இரத்தத்தைச் சிலுவையில் சிந்தி நமக்குப் புத்துயிரூட்டினார்.