May

சாலொமோனிலும் பெரியவர்

2024 மே 11 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 4,29 முதல் 34 வரை) “தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்” (வசனம் 29). கர்த்தர் சாலொமோனுக்கு பரந்த ஞானத்தையும் மிகப் பெரிய புரிதலையும் கொடுத்தார். சாலொமோன் தனது ராஜ்யபாரத்தின் மேன்மையான ஆண்டுகளில், கர்த்தர் கொடுத்த விலை மதிப்பற்ற ஞானத்தைப் பயன்படுத்தினான். துக்கமான காரியம் என்னவெனில், அவன் அந்த ஞானத்தை எப்பொழுதும் எல்லா இடங்களிலும் பிரயோகிக்காமல் விட்டுவிட்டதேயாகும். இது அவனை படிப்படியாக…

May

உண்மையான செழிப்பு

மே 10 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 4,21 முதல் 28 வரை) “சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்” (வசனம் 25). இஸ்ரவேல் நாட்டின் வரலாற்றிலேயே சாலொமோனின் ராஜ்யம் மிகப் பெரிய எல்லைகளைக் கொண்டதாக இருந்தது. “அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதுமான” (ஆதியாகமம் 15,18) தேசத்தைக் கொடுப்பேன்…

May

உண்மையுள்ள வேலைக்காரர்கள்

2024 மே 9 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 4,1 முதல் 20 வரை) “ராஜாவாகிய சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாயிருந்தான்” (வசனம் 1). சாலொமோனின் அரசாட்சி ஸ்திரப்பட்டது. அவனுடைய ஆட்சிக் காலத்தில் செல்வமும் செழிப்பும் பெருகி, அமைதியும், சமாதானமும் உண்டாகியது. அவன் ஆண்டவர் அருளிய ஞானத்தால் ஆட்சிபுரிந்தான். இந்த ஆட்சி இஸ்ரவேல் நாட்டுக்கு மட்டுமின்றி, உலக நாடுகளுக்கும் சமாதானத்தைக் கொண்டுவந்தது. போரற்ற அமைதியும், அநீதியற்ற ராஜ்யமும் ஸ்தாபிக்கப்பட்டது. பல்வேறு தீமைகளுக்கும், எண்ணற்ற மனித உயிர்களைப் பழிவாங்கிய…

May

பிரச்சினைகள் தீவிரமாகும்போது…

2024 மே 8 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 3,16 முதல் 28 வரை) “ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்” (வசனம் 28). ஒரு குழந்தைக்குச் சொந்தங்கொண்டாடிய இரு தாயார்களின் உண்மைக் கதை இது. தேவன் அருளிய ஞானத்தின் அடிப்படையில் இந்த வழக்கை சாலொமோன் மிகவும் அற்புதமாகத் தீர்த்துவைத்தான். இரண்டு வேசிப் பெண்கள் அரண்மனை வழக்காடு மன்றத்தில் நின்றார்கள்…

May

பாராட்டுதல் பெற்ற ஜெபம்

 2024 மே 7 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 3,10 முதல் 15 வரை) சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது (வசனம் 10). சாலொமோனின் வேண்டுகோள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தது. ஞானம், பகுத்தறிவு மற்றும் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றின் பெரும் தேவையை சாலொமோன் அறிந்திருந்தார். மேலும் இவன் தனக்காகச் செல்வத்தையோ, புகழையோ, அதிகாரத்தையோ கேட்காததைக் கண்டும் கர்த்தர் மகிழ்ச்சியடைந்தார். சாலொமோன் ஜெபத்தில் பொருட்களைக் கேட்கவில்லை, மாறாக தன்னுடைய குணத்தை மெருகேற்றும்படியான காரியத்தைக் கேட்டான். நம்மிடம்…

May

நடைமுறை ஞானம்

2024 மே 6 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 3,5 முதல் 9 வரை) “கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்” (வசனம் 5). பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கர்த்தர் சொப்பனத்தில் தரிசனமாகி பேசுவது வழக்கமான ஒன்று. ஆபிரகாம், யாக்கோபு, யோசேப்பு, கிதியோன் போன்றோரிடம் இவ்வாறு பேசியிருக்கிறார். இதைக் குறித்து, “கனநித்திரை மனுஷர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில், அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய…

May

ஒப்புவித்தலின் வாழ்க்கை

2024 மே 5 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 3,4) “அப்படியே ராஜா, பலியிட கிபியோனுக்குப் போனான்” (வசனம் 4). சாலொமோனின் செயல்களில் இன்றியமையாத காரியங்களில் ஒன்று, அவன் ஆட்சிக்கு வந்த புதிதில் கிபியோனுக்குச் சென்று கர்த்தருக்குப் பலி செலுத்தியதாகும். எருசலேமிலிருந்து ஏறத்தாழ இருபது மைல் தொலைவில் உள்ள கிபியோனுக்கு தன்னுடைய பரிவாரங்களோடு சென்று கர்த்தருக்குப் பலி செலுத்தினான். இருபது மைல் பயணத்தின் பிரயாசம், செலுத்தப்பட்ட ஆயிரம் பலிகள் ஆகியவை சாலொமோனின் இருதய வாஞ்சையையும் கர்த்தருக்கு அதிகமாகக்…

May

சமநிலை வாழ்க்கை

2024 மே 4 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 3,1 முதல் 3 வரை) “சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி …” (வசனம் 1). இந்த அதிகாரம் சாலொமோனின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறது. சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடன் ஒப்பந்தம் செய்து, பார்வோனின் மகளை மணந்தான். அண்டை நாட்டு அரச குடும்பத்துடன் சம்பந்தங்கலப்பது அல்லது திருமணம் செய்துகொள்வது பண்டைய உலகில் ஒரு பொதுவான அரசியல் உத்தியாக இருந்தது. ராஜ குடும்பத்தினர்…

May

அலட்சியம் வேண்டாம்

2024 மே 3 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,36 முதல் 46 வரை) “நீ கர்த்தரின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாதே போனதென்ன?” (வசனம் 43). சீமேயி சவுல் அரசனின் உறவினன். இவனுக்குப் பின் தாவீது அரசாண்டதை விரும்பாதவன். தாவீது அப்சலோமுக்குத் தப்பி ஓடிப்போகையில் பின்னாகவே வந்து அவனைத் தூசித்தவன் இவன். இவன் நிம்மதியாக மரணமடையக் கூடாது என்று தாவீது சாலொமோனுக்குச் சொல்லியிருந்தபடியால், சாலொமோன் அவனை அழைத்து எருசலேமைவிட்டு எங்கும் போகக்கூடாதென்று வீட்டுக்…

May

புகலிடம் சேர ஆசிப்போம்

2024 மே 2 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,28 முதல் 35 வரை) “யோவாப் அப்சலோமின் பட்சம் சாயாதவனாயிருந்தும், அதோனியாவின் பட்சம் சாய்ந்திருந்தான்” (வசனம் 28). அதோனியாவுக்கும் அபியத்தாருக்கும் சாலொமோன் தண்டனை வழங்கிய செய்தி யோவாபை எட்டியது. இது அவனது இருதயத்தில் திகிலை உண்டாக்கியது. சாலொமோனின் அடுத்த குறி நான் தான் என்பதை அவன் புரிந்துகொண்டான். தன்னுடைய பழைய குற்றச் செயல்களுக்காக தாவீதிடம் தண்டனை பெறாமல் தப்பித்தாலும், அதோனியாவுக்கு ஆதரவளித்தது தன்மீது விழுந்த குற்றம் என்று…