January

நம்பிக்கெடுதல்

2024 ஜனவரி 11 (வேத பகுதி: 2 சாமுவேல் 4,1 முதல் 12 வரை) “இன்றைய தினம் கர்த்தர் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவன் குடும்பத்தாரின் கையிலும் பழிவாங்கினார் என்றார்கள்” (வசனம் 8). அப்னேர் எப்ரோனிலே செத்துப்போனதைச் சவுலின் குமாரன் கேட்டபோது, அவன் கைகள் திடனற்றுபோயிற்று; இஸ்ரவேலரெல்லாரும் கலங்கினார்கள் (வசனம் 1). அப்னேர் இஸ்போசேத்துக்கு மட்டுமின்றி, முழு இஸ்ரவேல் மக்களுக்கும் எந்த அளவுக்கு நம்பிக்கையாக இருந்தான் என்பது  இதன் மூலம் புலனாகிறது. இதனாலேயே தாவீதும்…

January

எதிரியையும் பாராட்டுவோம்

2024 ஜனவரி 10 (வேத பகுதி: 2 சாமுவேல் 3,31 முதல் 39 வரை) “தாவீது யோவாபையும், அவனோடிருந்த சகல ஜனங்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டுடுத்தி, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீதுராஜா தானும் பாடைக்குப் பின்சென்றான்” (வசனம் 31). தாவீது அப்னேரின் பாடைக்கு முன்பாக நடந்துபோனதும், அடக்கம் செய்தபோது அழுது புலம்பியதும் ஓர் ஆச்சரியமான காரியமாகும். அப்னேர் தனக்கு எதிராகச் செயல்பட்டதையும், தான் ராஜாவாக வரக்கூடாது என்பதற்காக தீவிரமாகச்…

January

துரோகப் பழிவாங்கல்

2024 ஜனவரி 9 (வேத பகுதி: 2 சாமுவேல் 3,22 முதல் 30 வரை) “அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல, அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க, அங்கே அவனை வயிற்றிலே குத்திக்கொன்றுபோட்டான்”. (வசனம் 27). அப்னேரின் சடுதியான மரணம் தாவீதை அதிர்ச்சியடையச் செய்தது. மனித முயற்சிகளுக்கு அப்பால் தேவனின் தெய்வீகக் கரத்தின் செயல்பாட்டை அப்னேருடைய மரணம் நமக்கு வெளிப்படுத்துகிறது. தாவீது அப்னேருடன்…

January

சண்டைக்குப் பின் சமாதானம்

2024 ஜனவரி 8 (வேத பகுதி: 2 சாமுவேல் 3,12 முதல் 21 வரை) “அப்னேரும், அவனோடேகூட இருபதுபேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்துசெய்தான்” (வசனம் 20). தாவீது சமாதானத்தை விரும்புகிறவன். எதிரிகளாக இருந்தாலும் அவர்களுடைய பலத்தையும் திறமையையும் மதிக்கிறவன். அப்னேர் தூது அனுப்பினபோது தாவீது அதை ஏற்றுக்கொண்டான். அவனுக்கு விருந்து செய்து அவனைச் சமாதானத்துடன் அனுப்பிவிட்டான். இதுவரை கர்த்தருடைய சித்தத்துக்கு விரோதமாக இருந்த அப்னேர் இப்பொழுது அதைப் புரிந்துகொண்டவனாக…

January

சண்டைகளின் முடிவு

2024 ஜனவரி 7 (வேத பகுதி: 2 சாமுவேல் 3,1 முதல் 11 வரை) “சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப் போனார்கள்” (வசனம் 1). உம்மிலே பெலன்கொள்ளுகிற மனிதர்கள் பலத்தின்மேல் பலம் அடைவார்கள் என்ற சங்கீதத்தின் வரிகள் தாவீதின் வாழ்க்கையில் உண்மையாயின (84,5 மற்றும் 7). தாவீது கர்த்தரில் நம்பிக்கை வைத்து, அவரில் பெலன் கொண்டான். சவுலின் குமாரன் இஸ்போசேத்தோ அப்னேரின்மேல் நம்பிக்கை…

January

சுயநலச் சண்டைகள்

2024 ஜனவரி 6 (வேத பகுதி: 2 சாமுவேல் 2,12 முதல் 32 வரை) “பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ?” (வசனம் 26). தாவீதின் படைத்தளபதி யோவாபும், இஸ்போசேத்தின் படைத்தளபதி அப்னேரும் மோதிக் கொண்டார்கள். இருவரும் மாபெரும் வீரர்கள், பராக்கிரமசாலிகள். இருவரும் இஸ்ரவேலர்கள், அதாவது சகோதரர்கள். கர்த்தரால் பயன்படுத்தப்படுகிற இரண்டு பெரிய மனிதர்கள் ஒரே இடத்தில் இருந்தாலும் அவர்கள் நடுவில் சண்டைகள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் தங்களைக்…

January

பொறுமையுடன் காத்திருத்தல்

2024 ஜனவரி 5 (வேத பகுதி: 2 சாமுவேல் 2,11) “தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம்” (வசனம் 11). தாவீது எப்ரோனைத் தலைநகராகக் கொண்டு மொத்தம் ஏழரை ஆண்டுகள் ஆட்சி செய்தான். அதில் தன்னுடைய கோத்திரத்தைச் சேர்ந்த யூதா மக்களை மட்டும் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான் (காண்க: வசனம் 10,11). மீதம் உள்ள கோத்திரங்கள் அனைத்தின்மேலும் சவுலின் குமாரன் இஸ்போசேத் ஆட்சி செய்த இரண்டு ஆண்டுகள்,…

January

வைராக்கியத்தால் போராட்டம்

2024 ஜனவரி 4 (வேத பகுதி: 2 சாமுவேல் 2,5 முதல் 10 வரை) “சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய்,…இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக்கினான்” (வசனம் 8 முதல் 9). தாவீது, சவுலின்மீது கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் அவன் இறந்தபின்னும் குறையவில்லை. சவுலின் உடலை துணிந்துபோய் எடுத்து அடக்கம்பண்ணின யாபேசின் மக்களை தாவீது பாராட்டினது மட்டுமின்றி, நானும் உங்களுக்கு நன்மை செய்வேன் என்று அவர்களுக்குச் சொல்லி அனுப்பினான். சவுல் இறந்தபோது…

January

திரும்பிவருதல்

2024 ஜனவரி 3 (வேத பகுதி: 2 சாமுவேல் 2,1 முதல் 4 வரை) “பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்” (வசனம் 1). கர்த்தர் தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய்திருந்தார். இப்பொழுது சவுல் இறந்துவிட்டான். நாற்காலி காலியாக இருக்கிறது. அண்ணன் எப்பொழுது சாவான் திண்ணை எப்பொழுது காலியாகும்…

January

நேசத்தின் வெளிப்பாடு

2024 ஜனவரி 2 (வேத பகுதி: 2 சாமுவேல் 1,17 முதல் 27 வரை) “உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்துபோனதில்லை” (வசனம் 23). சவுலும் யோனத்தானும் இறந்துபோனதினிமித்தம் தாவீது ஓர் இரங்கற்பா பாடினான். சவுல் தாவீதை ஓர் எதிரியாகப் பார்த்தான். ஆனால் தாவீது சவுலை ஒருபோதும் எதிரியாகப் பார்த்ததில்லை. யோனத்தானையும் சவுலையும் இஸ்ரவேல் நாட்டின் காப்பாளர்களாக, வீரர்களாக, பராக்கிரமசாலிகளாகப் பார்த்தான். ஆகவே சவுலின் மரணம் தாவீதுக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றாக இருக்கவில்லை.…