April

இருமனதின் தீமைகள்

2024 ஏப்ரல் 25 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,38 முதல் 53 வரை) “இதோ, அதோனியா … பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு, இருக்கிறான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.” (வசனம் 51). தாவீது ராஜாவின் ஒப்புதலுடன், அவனுடைய பிரதான அதிகாரிகள் மற்றும் மெய்க்காவலர்களின் தலைமையில், மக்களின் ஆதரவுடன் விமர்சையான வகையில் அடுத்த மன்னராக சாலொமோன் முடிசூட்டப்பட்டான். “மன்னர் வாழ்க”, “கர்த்தர் மன்னரை ஆசீர்வதிப்பாராக” என்னும் கோசங்கள் விண்ணையும் மண்ணையும் பிளந்தன. இந்தச் சத்தம் போலி ஆதரவாளர்களுடன் தனக்குத்…

April

முடிவுபரியந்தமும் நிலைத்திருத்தல்

2024 ஏப்ரல் 24 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,26 முதல் 37 வரை) “பின்பு தாவீதுராஜா, ஆசாரியனாகிய சாதோக்கையும் தீர்க்கதரிசியாகிய நாத்தானையும் யோய்தாவின் குமாரன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்” (வசனம் 32). தாவீது பத்சேபாளை மீண்டும் தன் அறைக்கு அழைத்து, அவன் அவளுக்கு ஏற்கனவே கொடுத்த வாக்கின்படி இன்றைய தினம் நான் சாலொமோனை ராஜாவாக்குவேன் என்று சொல்லி உறுதியளித்தான். சற்றுக் காலதாமதம் ஆனாலும் அதோனியாவால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்று கருதி, துரிதமாகச் செயல்பட்டான். நாமும்…

April

உண்மைக்கு முகங்கொடுத்தல்

2024 ஏப்ரல் 23 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,15 முதல் 27 வரை) “இப்பொழுது, இதோ, அதோனியா ராஜாவாகிறான்; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை” (வசனம் 18). பத்சேபாள் தாவீதிடம் பேசும்படி அரண்மனைக்குச் சென்றாள். தாவீது வயதுமுதிர்ந்த நிலையில் இருந்தான். இந்தத் தருணத்தில் உடல் ரீதியாக அவனுக்குச் சேவை செய்ய ஓர் அபிஷாக் இருந்ததுபோல, ஒரு தலைவனாக எதிர்காலக் காரியங்களைத் திட்டமிடவும் ஒழுங்குபடுத்தவும் ஓர் உண்மையுள்ள வழிகாட்டி அவசியம். பத்சேபாள் அதைத் தாவீதுக்கு…

April

உரியோருக்குத் தோள்கொடுத்தல்

2024 ஏப்ரல் 22 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,12 முதல் 14 வரை) “என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா” (வசனம் 13). “இப்போதும் உன் பிராணனையும், உன் குமாரனாகிய சாலொமோனின் பிராணனையும் தப்புவிக்கும்படிக்கு நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன்” (வசனம் 12) என்று நாத்தான் பத்சேபாளிடம் பேசினான். அதோனியா ராஜாவானால் என்ன நடக்கும் என்பதை நாத்தான்…

April

உரிய கனத்தைச் செலுத்துதல்

2024 ஏப்ரல் 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,11) “நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா” (வசனம் 11). நாத்தான் ஒரு கர்த்தருடைய தீர்க்கதரிசி. ஆயினும் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட ராஜாவுக்கு செலுத்த வேண்டிய கனத்தைச் செலுத்தத் தவறவில்லை. தாவீதும் நாத்தானும் நண்பர்களாக இருந்தாலும், “நம்முடைய ஆண்டவனாகிய தாவீது” என்று அழைப்பதன் வாயிலாக ராஜ பதவிக்கு உரிய மரியாதையைச் செலுத்தினான். தன்னை எவ்வாறு கர்த்தர் அழைத்தாரோ அதுபோன்றே தாவீதையும்…

April

அவசரம் வேண்டாம்

2024 ஏப்ரல் 20 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,5 முதல் 10 வரை) “அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, …” (வசனம் 5). தாவீதின் மகன்களில் அம்னோனும் அப்சலோமும் இறந்துவிட்டதால், வாரிசு அடிப்படையில், ராஜாவாவதற்கானஅடுத்த இடத்தில் அப்சலோமின் தம்பி அதோனியா இருந்தான். தாவீதுக்குப் பின் தான்தான் ராஜா என்று முடிவெடுத்துவிட்டதால், தன்னைத் தானே அந்த ஸ்தானத்திற்கு உயர்த்திக்கொண்டான். இஸ்ரவேலின் ராஜா வாரிசு அடிப்படையில் மட்டுமின்றி, அவன் கர்த்தராலும் தெரிந்துகொள்ளப்பட்டவனாக…

April

வயது முதிர்வின் சோர்வு

2024 ஏப்ரல் 19 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,1 முதல் 4 வரை) “தாவீதுராஜா வயதுசென்ற விர்த்தாப்பியனானபோது” (வசனம் 1). ராஜாவாகிய தாவீதுக்கு வயது முதிர்ந்துவிட்டது. அவருக்கு மட்டுமின்றி அவரது புகழ்பெற்ற ஆட்சிக்கும் அந்திய காலம் நெருங்கிவிட்டது. தாவீதைப் போலவே இந்த உலகத்தில் பிறக்கிற ஒவ்வொருவருக்கும் வயது கூடிக்கொண்டே செல்கிறது. இந்த உலகத்தில் எவருமே இளமையோடு நீண்ட நாட்கள் இருக்க முடியாது. ஒரு நாள் நாமும் இந்தக் எல்லைக் கோட்டைத் தொட வேண்டும். இது நாம்…

April

தேவகிருபையின் மகத்துவம்

2024 ஏப்ரல் 18 (வேத பகுதி: 2 சாமுவேல் 24,18 முதல் 25 வரை) “அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான்” (வசனம் 23). தாவீது இந்தப் பாவத்தை எளிதில் எடுத்துக்கொள்ளவில்லை. நான் பாவம் செய்தேன் என்று அவன் மனபூர்வமாக ஒத்துக்கொண்டதைப் போலவே மனந்திரும்புதலும் உண்மையாயிருந்தது. கர்த்தருடைய தூதன் நின்ற அர்வனாவின் களத்தில் பலிபீடம் கட்டுவதற்காக அதை முழு விலை கொடுத்து வாங்கியதன் மூலம் அதை நிரூபித்தான். தான் விலைக்கு வாங்கிய…

April

நேர்மையுடன் ஒத்துக்கொள்ளுதல்

2024 ஏப்ரல் 17 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,10 முதல் 17 வரை) “இவ்விதமாய் ஜனங்களை எண்ணினபின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது” (வசனம் 10). மக்கள் தொகை கணக்கிடப்பட்டு அதன் எண்ணிக்கை அவனுக்கு அறிவிக்கப்பட்ட உடனே தாவீதின் இருதயம் அவனை வாதித்தது. பத்து மாதங்களாக அமைதியாயிருந்த இருதயம் இப்பொழுது தன்னுடைய வேலையைச் செய்யத் தொடங்கியது. நமது இருதயத்தைக் காட்டிலும் மேலானவராகிய கடவுளால் நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இருதயம் தன்னுடைய நியாயத்தீர்ப்பைத் தொடங்கியது. நம்முடைய இருதயமே…

April

பெருமை அழிவைத் தரும்

2024 ஏப்ரல் 16 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,1 முதல் 9 வரை) “இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபதுநாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள்” (வசனம் 8). “அவர் (கர்த்தர்) அவர்களுக்கு விரோதமாய் தாவீதை ஏவி, நீ போய் இஸ்றாயேலரையும், யூதாவையும் கணக்கிடு என்றார்” (வசனம் 1 இலகு தமிழ்) என இங்கே வாசிக்கிறோம். இதற்கு இணையான பகுதியை நாளாகமத்தில் வாசிக்கும்போது, “சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது” (1…