யோவான் தமது நூலில் கிறிஸ்து தேவகுமாரன் என நிரூபிக்க ஏழு அடையாளங்கள், அறிக்கைகளைப் பயன்படுத்துவதுபோல கிறிஸ்து உட்பட்ட ஏழுபேரின் சாட்சிகளையும் முன்னிறுத்துகிறார்.
1. யோவான்ஸ்நானன் – இவரே தேவனுடைய குமாரன். (யோவான் 1:34)
2. நாத்தான்வேல் – ரபீ நீர் தேவனுடைய குமாரன். (யோவான் 1:49)
3. பேதுரு – நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து. (யோவான் 6:69)
4. மார்த்தாள் – ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து. (யோவான் 11:27)
5. தோமா – என் ஆண்டவரே, என் தேவனே. (யோவான் 20:28)
6. யோவான் – இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து. (யோவான் 20:31)
7. கிறிஸ்து – நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே… (யோவான் 10:36)