முன்னுரைப்பு: உபாகமம் 18:18
உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்@ நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.
நிறைவேறுதல்: மத்தேயு 21:10-11
அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
லூக்.7:15-16
மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். எல்லாரும் பயமடைந்து: மகாதீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
யோவான் 4:19
அப்பொழுது அந்த ஸ்திரீ (சமாரிய ஸ்திரீ) அவரை (இயேசுவை) நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.
(இன்னும் யோவான் 6:14, 7:40, அப்.3:22-23ஐ பார்க்கவும்.
மோசே தீர்க்கதரிசிகளில் தலைசிறந்தவராக மதிக்கப்பட்டார். அவரைப்போல ஒரு தலைசிறந்த தீர்க்கதரிசி எழும்பவார் என்ற முன்னுரைப்பு இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியது. அது எப்படியெனில்:
(1) இயேசுவும் மோசேயும் குழந்தைகளாயிருந்தபோது அரச மரண தண்டனைக்குத் தப்பினர்.
(2) இருவரும் தங்கள் ஜனத்தை மீட்க உலகத்திற்கு அனுப்பப்பட்டனர்.
(3) இருவரும் யேகோவாவிற்கும், யூத ஜனத்திற்கும் மத்தியஸ்தராயிருந்தனர்.
(4) இருவரும் பாவிகளுக்காக, முரட்டாட்டம் பிடித்த மக்களுக்காக விண்ணப்பம்பண்ணுகிறவர்களாக இருந்தனர்.