ரோ.12.1-8
பவுல் உண்மையான வழிபாடு, தேவையான மாறுதல் குறித்து எழுதுகிறார். பவுல் கடிதங்களை முடிக்கும் நேரத்தில் நடைமுறைக்கேற்ற அறிவுரையே தருகிறார். ‘உங்கள் உடல்களைத் தேவனுக்கு அர்பணியுங்கள்” என்கிறார் பவுல். இது குறிப்பாக ஒரு கிறிஸ்தவக் கோட்பாடு. பிற தத்துவங்கள் கூறுவது: உடல் என்பது ஆன்மாவின் சிறைக்கூடம்; அருவருக்கத்தக்கது: வெட்கத்துக்குரியது. நம் நம்பிக்கையோ: நம் உடலே தேவனின் ஆவியானவருக்கு ஆலயமும் அவருடைய கருவியுமாகும். கடவுள் மனிதனானார். இதில் நம் சரீரத்தை அவர் அருவருக்காமல் ஏற்றுக் கொண்டார். நாம் செய்யும் சிறு அலுவல்களையும் வழிபாடாக ஏற்பார்;: அர்ப்பணி. உலகுக்கு ஒத்த வேஷம் வேண்டாம். மனம் புதிதாக்குவது எப்படி? தேவனுடைய சித்தத்தை அறிவதன் மூலம் புதிய மனதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உடலின் அங்கங்கள் எப்படிப் பெரிய அல்லது சிறிய காரியங்களைத் தர்க்கம், பொறாமை இல்லாமல் செய்வதுபோல, கிறிஸ்தவ சபை இணைந்து செயல்பட வேண்டும். முதலில் நம்மை நாமே அறிய வேண்டும். நம் திறமைகள், தகுதிகள், தாலந்துகள் பற்றிய சரியான தீர்வு வேண்டும். மற்றும் நம் வரங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறர் வரங்கள் பற்றிப் பொறாமை இல்லாமல், நம் ஒவ்வொருவருடைய தாலந்தும் தேவனுடைய பரிசு என்று உணர்ந்து தாலந்தைப் பயன்படுத்தி அவர் நாமம் மகிமை அடையச் செய்ய வேண்டும்.