கலாத்தியர் 4:12-31
தியானி: ஆபிரகாமின் இரண்டு குமாரரில் ஒருவன் அடிமையானவளிடத்தில் மாம்சத்தின்படி பிறந்தவன். மற்றொருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் வாக்குத்தத்ததின்படி பிறந்தவன். (22,23) இதன் ஞான அர்த்தமென்ன? தன் பிள்ளைகளோடு அடிமைப்பட்டிருக்கிற நிலை ஆகாருடையது. அது இப்பொழுதுள்ள எருசலேம் (25). ஆனால் விசுவாச சந்ததியான, சுயாதீனமுள்ள நம்மெல்லாருக்கும் தாயானவள் மேலான எருசலேமாவாள். ஆகையால் வாக்குத்தத்த பிள்ளைகளான நாம் மேலான மோட்சவீட்டை அடைய காத்திருக்கிறோம்!ஆனந்த பாக்கியம்: பவுல் தனது சரீரபலவீனத்திலும் முதலாந்தரம் அளித்த சுவிசேஷம் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது! (14,15) மீண்டும் வேண்டாத வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டதன் காரணமாக அந்த ஆனந்தபாக்கியத்தை இழந்துவிட்டனர் கலாத்திய சபையார். ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று ஆண்டவர் சொல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோமா? சிந்தித்து பார்ப்போம். பவுலின் பிரயாசம்: (1) சரீரத்தில் உண்டான சோதனையோடும பலவீனத்தோடும் பிரசங்கித்தல். (20 கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் வேதனையோடு வழி நடத்துதல். (3) என் சிறு பிள்ளைகளே என்று அழைக்குமளவிற்கு அவர்கள் மீது பாசம் காட்டுதல். நான் வாக்குத்தத்ததின் பிள்ளை. கிறிஸ்து என்னோடு வசனத்தின்மூலம் பேசும்போது நான் களிப்பாய் ஆர்ப்பரித்து அதில் நிலைத்திருக்கிறேனா?