சங்.56
சொந்த நாட்டில் சவுலினாலும், புகலிடம் தேடிய நாட்டில் பெலிஸ்தராலும் துன்புற்ற தாவீது, செய்வதறியாது நொந்த நிலையிலும் தேவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கவோ, எதிரிகளை வசைபாடவோ இல்லை. ஆனால் ‘ வெகு தொலைவில் சத்தமிடாத புறா ” எனப் பொருள்படும் இசைக் கருவியில் ‘ பொன்னான சங்கீதத்தை” இசைக்கின்றார். தேவனிடம் முறையிடுதல்: எண்ணிக்கையாலும் கொடுமையினாலும், தந்திரத்தாலும் தன்னிலும் தன் எதிரிகள் வல்லவர் என மனிதரிடமல்ல: தேவனிடம் முறையிடுகின்றார். கெடுதல் செய்ய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் எதிரிகள் தம் வார்த்தைகளால் துன்புறுத்தி, குற்றம் கண்டறிய உற்றுக் கவனிப்பார். தேவனில் தன்னை உற்சாகப்படுத்தல்: தேவனின் வாக்குறுதிகள், வல்லமை, கிருபை ஆகியவற்றால் தன்னை உற்சாகப்படுத்துகின்றார். எதிரிகள் நம்மிலும் பெலசாலிகள் என்றும் தேவனுக்கு முன் பெலவீனரே. தேவனிடமிருந்து எதிர்பார்ப்பு: மனிதரிடமிருந்து தப்பிய தன் எதிரிகள் தேவனின் நியாயத் தீர்ப்புக்கு உட்படுவர் என தாவீது தேவனிடமிருந்து எதிர்பார்க்கின்றார். தண்டிப்பது தேவனின் செயலே. (உபா 32:35) தேவனின் ஆறுதல்: தேவன் தம்மவர்களின் வருத்தங்களை மறப்பதில்லை என்பது தாவீதுக்கு ஆறுதல் அளித்தது. தேவனைத் துதித்தல்: மனமகிழ்ந்து பொருத்தனைகளை தாவீது ஏறெடுக்கின்றார். விடுதலைக்கு முன்னோடி. தேவனைத் துதித்தல்.