ஏசாயா 14:12-32
நீ வானத்தினின்று விழுந்தாய் இப்பகுதியில் நியாயத்தீர்ப்பைக் குறித்து சிந்திக்கிறோம். கடந்த நாட்களில் பாபிலோன் விடிவெள்ளியைப் போன்று மகிமை நிறைந்ததாய் இருந்தது. கடவுளின் இரக்கத்தை மறந்து பாபிலோனிய மன்னன் தனது கடந்த கால வெற்றி பற்றி பெருமை கொள்ளுகிறான். சாத்தான் ஆதாமைச் சோதித்த போது நீங்கள் தேவனைப் போலாவீர்கள்| எனக்கூறியதை நினைக்கிறோம். பெருமையுள்ள பாபிலோனிய மன்னன் வீழ்ந்தான். கடவுளின் சக்தியைத் தவறாகப் பயன்படுத்தியதால் அவருக்கு எந்த நினைவுச் சின்னமும் எழுப்பப்பட மாட்டாது. அவனது சரீரம் நல்லடக்கம் செய்யப்படுவதில்லை. பாபிலோனியப் பண்பாடும் பழக்கமும் இறைவனின் நல்லாட்சிக்கு விரோதமாயிருப்பதால் அது அழிக்கப்படும் கடவுள் நீதியுள்ள நியாயாதிபதி. தனக்கென்றே வாழ்ந்து தன்னைத்தான் உயர்த்த விரும்பும் எந்தத் தலைவனும் அழிந்து போவான். தரித்திரர் தழைப்பார்கள் தீர்க்கன் அசீரியா, பெலிஸ்தியர் ஆகியோரின் ராஜ்யங்களின் அழிவை முன்னறிவிக்கிறார். சீயோன் கர்த்தரால் ஸ்தாபிக்கப்படும் எளியவர்களும், தரித்திரரும் அதில் அடைக்கலம் பெறுவர். ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் பரலோகராஜ்யம் அவர்களுடையது| கடவுள் தரித்திரரைத் தாங்குகிறார்.