முன்னுரைப்பு: ஏசாயா 9:1-2
ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை. ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார். இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.
யோவான் 4:12
யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய்,
நிறைவேறுதல்: மத்தேயு 4:13-16
நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார். கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே, இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
இயேசு கிறிஸ்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார் என்ற தீர்க்கதரிசனப்படி பெத்லகேமிலே பிறந்தார். ஆனால் அவருடைய ஊழியம் செபுலோன், நப்தலி கோத்திரங்களின் பிரதேசத்திலும் கடற்கரை பிரதேசத்திலும் நடைபெறும் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் அப்பிரதேசம் கலிலேயா நாடு என்று அழைக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து கலிலேயா நாட்டிலும், கலிலேயா கடற்கரைப் பிரதேசத்திலும் தமது ஊழியத்தைத் துவக்கி இத்தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்.