சங்.57
விண்ணப்பமும் நம்பிக்கையும்: ஆயக்காரனைப் போல் ‘எனக்கு இரங்கும்” என ஜெபிக்கும் தாவீது, தனக்கு நேரிட்ட துன்பங்கள் காலம் வரும் பொழுது நிச்சயம் கடந்திடும் என்பதையும், அதுவரைக்கும் கர்த்தரின் காக்கும் செட்டைகளுக்குள் அடைக்கலம் புகுந்துக் கொள்வேன். என்றும் கூறுகின்றார். அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறியுங்கள் என்றுக் கூறியவரே தனக்காய் செயல்படும் தேவன் என்று தாவீது எதிர்ப்பார்க்கின்றார். தனக்கு உதவி எப்பக்கமிருந்தும் வராத நேரத்திலும், ஒத்தாசை செய்யும் பர்வதமாகிய தேவனிடமே நம்பிக்கை கொள்கிறார். தேவனை நம்பியோர் ஒருநாளும் கைவிடப்படுவதில்லை. தன் எதிரிகளின் செயல்களைக் குறித்து தேவனிடமே தெரிவிக்கின்றார். தன் துன்பநிலையிலும் தானல்ல தேவனே மகிமைபட வேண்டுமென விண்ணப்பிக்கின்றார். துதிக்கும் முறை: (1). தன்னை ஆயத்தம் செய்தல் (2). தூக்க மயக்கத்துடன் அல்ல விழிப்புணர்ச்சியுடன் துதித்தல் (3). தனக்குத் தேவன் எவ்வளவு நல்லவர் என மற்றவர் அறிய வேண்டும் என்ற தீர்மானம் (4). துதித்தலுக்கான கருத்துகள் (5). தேவனிடம் தன் பெயரை மகிமைபடுத்திக்கொள்ள தேவனிடம் விட்டுக் கொடுத்தல்.