யூன் 30
மோசே தன் கையை ஏறெடுத்;திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.
(யாத் 17 :11)
அமலேக்கியரோடு இஸ்ரவேலர் போர் புரிந்துகொண்டிருந்தனர். மோசே மலையின் உச்சியில் நின்றுகொண்டு போர் களத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். மோசேயின் கையின் நிலையே வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வேறுபாட்டை நிர்ணயித்துக்கொண்டிருந்தது. அவனுடைய கை தாழ்ந்தபோது, இஸ்ரவேலர் பின்வாங்கினர்.
கையை உயர்த்தினவனாக இருந்தபோது மோசே, நம்முடைய கர்த்தர் இயேசுகிறிஸ்து பரிந்துபேசுவதைச் சித்தரிக்கிறார். “அவருடைய பரிவினாலும், அன்பினாலும் அவர் தமது கரங்களை உயர்த்துகிறார்.” அவருடைய பரிந்துபேசுதலினால் நாம் கடைசிவரை இரட்சிக்கப்படுகிறோம். ஆனால் அதற்குப்பிறகு அந்த காட்சியில் மோசே இயேசு கிறிஸ்துவிற்கு நிழலாகக் காணப்படுவதில்லை. ஏனெனில் நம்முடைய கர்த்தரின் கரம் ஒருக்காலும் தாழ்வதில்லை. களைப்படையச் செய்யும் எந்த வேலையும் அவரை வெளியிலிருந்து உதவியை நாடச் செய்வதில்லை. எப்போதும் நமக்காகப் பரிந்துபேச என்றென்றும் வாழ்கிறவராக இருக்கிறார்.
நம்மை ஜெபவீரர்களாச் சித்தரித்துக் காட்டும் நிகழ்ச்சியாகவும் இதனைக் கருதலாம். இப்பூவியில் ஆவிக்குரிய நிலையில் போர் புரியும் ஊழியர்களுக்காக உண்மையோடு நாம் மன்றாடுவதை உயர்த்திய கை சித்தரிக்கிறது. ஜெப ஊழியத்தை நாம் புறக்கணிக்கிறபோது எதிரி மோலோங்கி நிற்கிறான்.
ஊழிய வேட்டைக்குச் சென்ற மிஷனரி ஒருவரும் அவருடைய குழுவினரும் கொள்ளையர் நிறைந்த ஒரு பகுதியில் இரவைக் கழிக்கவேண்டியதாய் இருந்தது. தங்களை கர்த்தருடைய கரத்தில் ஒப்புவித்தவர்களாக, அவர்கள் படுக்கச் சென்றனர். பலமாதங்கள் கழிந்தன. ஒரு கொள்ளைக்காரனை மிஷன் மருத்துவ மனைக்குச் சிலர் கொண்டுவந்தனர். அங்கிருந்த ஊழியரைக் கண்டவுன் அக்கொள்ளைக்காரனுக்கு அவர் யார் என்று தெரிந்துவிட்டர். “நீங்கள் ஓர் இரவில் வயல் வெளியில் தங்கியிருந்தபோது உங்களைக் கொள்ளையிட நினைத்தோம். ஆனால் உங்களுடன் இருந்த 27 படைவீரர்களைக் கண்டு பயந்துவிட்டோம்” என்று அவன் கூறினான். இந்த நிகழ்சியைக் குறித்து தனது சொந்தசபைக்கு எழுதியபோது, ” அவன்றைக்கு சபையின் ஜெபக்கூட்டத்தில் 27 பேர் கலந்துகொண்டதாக” பதில் வந்தது.
இன்னொரு உண்மையையும் இந்நிகழ்ச்சியில் நாம் காண்கிறோம். தலைமுறை தலைமுறைதோறும் அமலேக்கியயோரு யுத்தம் நடக்குமென்று கர்த்தர் சூளுரைத்துள்ளார். அமலேக்கு மாம்சத்திற்கு அடையாளமாக இருக்கிறான். மாம்சத்திற்கு எதிராக கிறிஸ்தவன் இடைவிடாது போர் புரியவேண்டியவனாக இருக்கிறான். ஜெபம் அவனுடைய முக்கியமான போர் கருவியாக இருக்கிறது. அவனுடைய ஜெபவாழ்க்கையின் உண்மையுள்ள தன்மை வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வேறுபாட்டை நிர்ணயிக்கிறது.