உபா. 6:1-25
மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் காரியம் தேவனுடைய கட்டளைகளையும் கற்பனைகளையும் கைக்கொள்ளுங்கள் என்பதே. இது எத்தனை அவசியம் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். இஸ்ரவேலே கேள் (வ. 4). கேள் என்ற வார்த்தையின எபிரேய பதம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. உபா. 6:4-9, 13-21, எண. 15:37-41 ஆகிய மூன்று பகுதிகளும் இந்த பதத்தைக் கொண்டே அழைக்கப்படுகிறது. யூத ஜெப ஆலயங்களில் ஆராதனைகள் இவ்வார்தையினைக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டன. மேற்கண்ட மூன்று பகுதிகளையும் கொண்ட சிறியதோல் பெட்டிகளை ஒரு பக்தியுள்ள யூதன் தன் நெற்றியிலும் மணிகட்டிலும் அணிந்து கொள்வான் (வ. 8), வீட்டின் நிலைகளிலும் இப்பகுதிகள் வைக்கப்பட்டுள்ள சிறிய பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு எழுதி வைப்பதோடு நின்று விடாது நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறவர்களாக நாம் மாற வேண்டும். பிள்ளைகளுக்குப் போதிப்பாய்: (வ. 20-25) நமது வீடுகளில் அதிகமாகப் பேசப்படுகிற காரியம் எது? பிள்ளைகள் நமது வாயினின்று எப்படிபட்டவைகளைக் கேட்கிறார்கள்? தேவன் செய்த நன்மைகளை எண்ணிப் பார்த்து அவருக்கு நன்றி செலுத்துகிறோமா?