முன்னுரைப்பு: யாத்.12:5
அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும். செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம்.
எண்.19:2
கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள்.
பஸ்காவில் அடிக்கப்படும் ஆட்டுக்குட்டி பழுதற்றதாய் இருக்கவேண்டும் என்று யாத்திராகமத்தில் ஆண்டவர் கூறியுள்ளார்.
நம்முடைய பாவங்களைப் பரிகரிக்கும்படியாக அடிக்கப்பட்ட பஸ்காவின் ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்து பழுதற்றவராக இருந்தார் என்று பேதுரு சாட்சி கொடுக்கிறார்.
நிறைவேறுதல்: 1.பேது.1:19
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
எபி.9:14
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
இயேசுவோடு நெருங்கிப் பழகிய அவருடைய சீடர்கள் அவா மாசற்றவராக, பழுதற்றவராக நம்முடைய பாவங்களைப் பரிகரிக்கும் பலி ஆனார் என்று கூறியிருக்கின்றனர்.