ஏப்ரல் 12
அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? (லூக்.16:11)
உலகீயப் பணச்செல்வமும், பொருட்செல்வமும் அநீதியான உலகப்பொருள் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. மிகுதியாக உலகப்பொருளைச் சேர்த்து வைத்திருக்கிறவனே செல்வந்தன் என்ற பொய்யான எண்ணத்தைப்போன்று வேறு எந்தப் பொய்யும் மேலோங்கிக் காணப்படுவதில்லை. வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை நாம் அசையாச் சொத்துக்கள் என்று கூறுகிறோம். அவை நம்மைவிட்டு அகன்றுபோவதில்லை என்று நினைத்தே அப்படிச் சொல்கிறோம். வங்கியிலும், நிறுவனங்களிலும் முதலீடு செய்ததற்கான சான்றிதழ்களைப் பத்திரம் என்றுரைக்கிறோம். அவை நமது வாழ்க்கையைப் பத்திரமாகக் காக்கும் என நினைத்தே அப்படிச் சொல்கிறோம்.
ஆனால், அநீதியான உலகப்பொருளுக்கும், உண்மையான செல்வத்திற்குமுள்ள வேறுபாட்டினை லூக்கா 16:11 இல் கர்த்தர் விளக்கிக் காட்டியுள்ளார். செல்வமஇ என்று மனிதனால் கருதப்படுகிறதெதுவும் உண்மையான செல்வமில்லை. இதை விளக்கம் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.
ஜான் ஒரு பயபக்தியுள்ள கிறிஸ்தவர். பகட்டான பெரும் சொல்வந்தர் ஒருவருடைய பண்ணையில் கண்காணிப்பாளராக அவர் வேலை செய்தார். அடுத்த நாள் நடு இரவுக்குள் அந்த வட்டாரத்தில் உள்ள பெரும் செய்வந்தர் ஒருவர் இறந்துபோகப்போவதாக ஓர் இரவில் ஜான் மிகத்தெளிவான ஒரு கனவைக் கண்டார். காலையில் தனது எஜமானைக் கண்ட ஜான், தான் கண்ட கனவைப் பற்றிக்கூறினார். இதைக்குறித்து எவ்வித கவலையும் இல்லாததுபோலக் காண்பித்துக்கொண்டார் அந்த எஜமானர். அவர் நல்ல உடல் நலத்துடன்தான் இருந்தார். மேலும் அவர் கனவுகளை நம்புவதுமில்லை. ஆனால் ஜான் சென்றவுடன், அந்த செல்வந்தர் தனது கார் ஓட்டியை அழைப்பித்து பருத்துவரைக் காணச் சென்றார். தனது உடல் முழுவதையும் பரிசோதிக்கும்புடி வேண்டிக்கொண்டார். அச்செல்வந்தர் நல்ல உடல் நிலையில் இருப்பதாகவே எல்லாச் சோதனைகளும் காட்டின. இருந்தபோதிலும், ஜான் கண்ட கனவு அவரைத் தொடர்ந்து கலக்கமடையச்செய்தது. மருத்துவரிடம் விடைபெற்றுக்கொண்ட செல்வந்தர் அவரைத் தன் வீட்டிற்கு இரவு விருந்திற்கு வரும்படி அழைத்தார். மருத்துவரும் வருவதாக ஒப்புக்கொண்டார்.
இரவு விருந்து வழக்கம்போல் நடந்தது. அதன் பிறகு பல பொருட்களைக் குறித்து உரையாடினார்கள். பழமுறை மருத்துவர் அங்கிருந்து செல்ல முயற்சிசெய்தார். ஆனாலும் அச்செல்வந்தர் அவரை விடவில்லை. ஒவ்வொரு முறையும் இன்னும் கொஞ்ச நேரம் இருந்து செல்லும்படியாகச் செல்வந்தர் மருத்துவரைக் கேட்டுக்கொண்டார். கடைசியில் பன்னிரண்டு மணி ஓசை அடித்தது. தேவனற்ற செல்வந்தர் தனது உள்ளத்திலிருந்த பெருஞ்சுமை நீங்கியவராக, மருத்துவருக்கு விடை கூறி அனுப்பினார். சில மணித்துளிகள் சென்றன. கதவு மணி ஓசை அடித்தது. கதவைத் திறந்த செல்வந்தர் அங்கு ஜானின் மகள் நிற்பதைக் கண்டார். ஐயா என்னுடைய தந்தை சிறிது நேரத்திற்கு முன் இருதய வலி ஏற்பட்டு மரணம் அடைந்துவிட்டார். அதை உங்களுக்கு அறிவிக்க வந்தேன் என்று கூறினாள்.
அன்று இரவிலே அவ்வட்டாரத்தில் உள்ள பெரும் செல்வந்தர் ஜான் இறந்துபோய்விட்டார்.