மார்ச் 28
அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது (2.சாமு.13:15).
தாமார் மிகுந்த அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய ஒன்றுவிட்ட சகோதரன் அம்னோன் அவளிடத்தில் மோகம் கொண்டிருந்தான். மேலும், அவளை அடையவேண்டுமென்று உறுதிகொண்டிருந்தான். தேவனுடைய கற்பனையின்படி அவன் கொண்டிருந்த விருப்பம் தடைசெய்யப்பட்டது என்பதால் அவள் பெருத்த ஏமாற்றம் உயைடவனாயிருந்தான். இருந்தபோதிலும், அவள்மீது கொண்டிருந்த மோகத்தினால் வேறெதுவும் அவனுக்கு முக்கியமானதாகத் தோன்றவில்லை. ஆகவே அவன் நோய்வாய்ப்பட்டவன் போல நடித்தான். தன்னுடைய அறைக்குள்ளாக அவளை வயப்படுத்தி அழைத்து, தவறாக நடந்துகொண்டான். ஒருநொடிப்பொழுது காமவெறிக்காக அவன் எல்லாவற்றையும் துறந்துவிட ஆயத்தமுடையவனாக நடந்துகொண்டான்.
பின்னர், அவனுடைய மோகம் வெறுப்பாக மாறிற்று. சுயநலத்திற்காக அவளைப் பயன்படுத்திப் பின்னர், இழிவாக நடத்தினான். அவளைப் பார்க்கவும் விரும்பவில்லை. அவளை வீட்டைவிட்டு வெளியேற்றிக் கதவைப் பூட்டச் செய்தான்.
வரலாற்றில் இடம்பெற்ற இச்சரித்திரம் இவ்வுலகில் ஒவ்வொருநாளும் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. தன்னிச்சையாகச் சுழலும் சக்கரம் போன்று இயங்கும் நமது சமுதாயத்தில் பெரும்பாலும் ஒழுக்கத்தின் கூறுகள் அனைத்தும் பறக்கவிடப்பட்டுவிட்டன. திருமணத்திற்கு முன்பே தம்பதிகள் கூடிவாழ்கிறார்கள். திருமணம் செய்துகொள்ளத்தேவையில்லை என்று கருதுதப்படுகிறது. விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. ஓரினச் சேர்க்கை தாம்பத்திய வாழ்க்கைக்கு மாற்றாகக் கருதப்படுகிறது.
முதியவரும் இளைஞரும் ஒன்றுபோலவே தங்களுக்கு இன்பமானவர்களைக் கண்டு குடும்பம் நடத்துகின்றனர். மேன்மையான பிரமாணங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எந்த ஒழுங்குகளும் தடைகளும் அவர்களைக் கட்டுப்படுத்துவதும் இல்லை. தாங்கள் பெறவேண்டும் என்று நினைப்பதைப் பெற உறுதியுடன் செயல்புரிவார்கள். சரியா தவறா என்னும் எண்ணத்திற்குக் கையசைத்து வழிவிட்டு அனுப்பி விடுகின்றனர். வேறெந்த வழியிலும் இயல்பான வாழ்வை வாழமுடியாது என்று தங்களுடைய கருத்தை வாழ்க்கையின் தத்துவமாக்கிக் கொள்கின்றனர். அம்னேன் செய்ததுபோன்று துணிவுடைய செயல்களை இன்றைய நாட்களில் மனிதர்கள் செய்யத் தயங்குவதில்லை. அதன்பின்னர் பெரிய காரியத்தைத் செய்துமுடித்தாக நினைத்துக்கொள்கின்றனர்.
வருங்காலத்தில் இனிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டவை பிற்காலத்தில் அருவருக்கத்தக்கவையாகக் காட்சியளிக்கும். எவ்வளவுதான் கடுமையாக எதிர்த்தாலும், குற்ற உணர்வு தவிர்க்கமுடியாதது. தவறு செய்த இருவருமே தங்களது சுயமரியாதையை இழந்து விடுகின்றனர். பின்னர் அது அவர்களுக்கு வெறுப்பாக மாறிவிடும். அவரின்றி வாழ்வே இல்லையென்று கருதப்பட்டவர்கள் இப்பொழுது முற்றிலும் வெறுக்கத்தக்கவராகிவிடுகிறார். அது அடிதடியாக மாறும், நீதிமன்றத்தில் போராடுவார்கள், சிலவேளைகளில் கொலையிலும் முடியும்.
நிலையான உறவைக் கட்டுவதற்கு மோகம் மிகவும் தரக்குறைவான அஸ்திபாரமாக இருக்கிறது. பரிசுத்தத்தைப் பற்றிய தேவனுடைய பிரமாணத்தை மனிதன் தன்னுடைய இழப்பிற்கும் அழிவிற்குமாகப் புறக்கணித்துவிடுகிறான். பாவமன்னிப்பையும், சரி செய்தலையும், முன்னிருந்த நிலைக்கு மீண்டும் கொண்டுவருவதையும் தேவனுடைய கிருபை மட்டுமே செய்யவல்லதாயிருக்கிறது.