பெப்ரவரி 10
நான் சொல்லுகிறதென்னவென்றால் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள் (கலா.5:16).
சிலர் சிந்திப்பதுபோன்று, ஆவிக்கேற்றபடி நடந்துகொள்வதில் எவ்விதச் சிக்கலும் இல்லை. அது நடைமுறைக்கு ஒவ்வாததுமில்லை. ஆவிக்கேற்ற ஒரு நாள் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டுமென்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை இங்கு காணலாம்.
முதலாவதாக, அந்நாளை ஜெபத்தில் தொடங்குங்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் அறிந்த எல்லாப் பாவங்களையும் கர்த்தரிடம் அறிக்கை செய்யுங்கள். இதன் காரணமாக நீங்கள் தூய பாத்திரமாகக் காணப்பட்டு எஜமானுக்கு உகந்த பாத்திரமாக பயன்படுவீர்கள். தொடர்ந்து அவரைப் புகழ்ந்து தொழுதுகொள்ளுவதால் உங்களது ஆத்துமா தகுதியுடையதாகும். உங்களுடைய வாழ்வின் கட்டுப்பாட்டை அவரிடம் தாருங்கள். அவரை வாழ்ந்து காட்ட இது உங்களை ஆயத்தப்படுத்தும். “தேவையற்ற திட்டங்களை நீங்கள் தீட்டாமல் அவருடைய ஆளுகைக்குக் கீழாக உங்களுடைய வாழ்வினை ஒப்புவிப்பதாக இச்செய்கை அமையும்.
அடுத்தபடியாக, இறைவனின் சித்தத்தை அறிய திருவெழுத்துகளை உட்கொள்ள நேரத்தைச் செலவிடுங்கள். உங்களுடைய வாழ்வின் தற்போதைய சூழ்நிலைக்குக் காரணங்கள் எவை என்பதையும் உணர்வீர்கள்.
ஆமைதியான தியான நேரத்திற்குப்பிறகு, நீங்கள் நாள்தோறும் செய்கின்ற அலுவல்களைச் செய்யுங்கள். உலகீய அலுவல் யாவும் ஆவிக்குரிய வாழ்வின் பகுதியே. அவற்றைக் கருத்தோடும் உண்மையோடும் செய்யுங்கள். நாளின் இடையிடையே குறுக்கிடுகின்ற பாவத்தை அறிக்கைசெய்து விட்டுவிடுங்கள். நீங்கள் பெறுகின்ற நற்பேறுகளுக்கு நன்றி செலுத்துங்கள். நன்மை செய்யத்தோன்றும் எண்ணங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். தீமையாய் தோன்றுகிற சோதனைகளை எதிர்த்து நில்லுங்கள்.
இந்நாளில் நீங்கள் எதிர்கொள்கிற நிகழ்ச்சிகள் யாவற்றையும் அவருடைய சித்தமாகவும், தடைகளை ஊழியம் செய்வதற்கான வாய்ப்புகளாகவும் கருதுங்கள். தோல்விகள் யாவும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளாகவும் கருதுங்கள். கேரால்ட்டு வைஸ்டிஸ் என்பார் எடுத்துக்காட்டியுள்ள மேற்கோளைக் காணுங்கள்.
“பாவபாரத்தை விட்டொழித்து இயேசுகிறிஸ்து நிறைவேற்றிய இரட்சிப்பின் செயலைச் சார்ந்து இளைப்பாறுவது போன்றே, உங்களது வாழ்வு மற்றும் ஊழியத்தின் பாரத்தையும் தூய ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு ஒப்புவித்து இளைப்பாறுங்கள்.
“காலைதோறும் தூய ஆவியானவரின் வழிநடத்துதலுக்கும், அவருடைய ஆதிக்கத்திற்கும் உங்களுடைய வாழ்வை ஒப்புவியுங்கள். அவருக்கு மகிழ்வுடன் கீழ்ப்படிய, அவரால் வழிநடத்தப்பட, வெளிச்சத்தைக் காண, கடிந்துகொள்ளப்பட, கற்றிட, பயன்பட, அவருடைய சித்தம் உங்களிலும் உங்கள் மூலமாகவும் நிறைவேற அவரிடம் உங்களை ஒப்புவியுங்கள். அவருடைய செயல்ப்பாட்டை உங்கள் கண்கள் காணா, உங்களுடைய மெய் உணராது. தூய அவியானவரே நமது வாழ்வை ஆளுகை செய்பவர். நமது செயல்களை நிறைவேற்ற நாம் பாராப்படுவதை விட்டொழிவோம். இவ்வகை ஒப்புவித்தல் நமது வாழ்வில் ஆவியின் கனியாக வெளிப்படும். தேவனுடைய மகிமையாகத் திகழும்.