ஜனவரி 31
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் (மத்.7:1)
வேதத்தில் மற்ற பகுதிகளைக் கறித்து அறிவற்ற பலர், இந்த வசனத்தை நன்கு தெரிந்து வைத்திருப்பதோடு, இதனைப் புதுமையான முறையில் பயன்படுத்தவும் செய்கின்றனர். சொல்லொண்ணா பொல்லாங்குகளை உடைய மனிதனைக் குற்றப்படுத்திப் பேசும் நேரத்தில், இவர்கள் பயபக்தியுள்ள குரலில், “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” என்ற கூறுவார்கள். அதாவது, தீங்கையம் பொல்லாங்கையும் குற்றம் எனத் தீர்க்கின்ற வேளைகளில், அதைத் தடைசெய்வதற்கும் இவ்வசனத்தை அவர்கள் பயன்படுத்துவார்கள்.
இதைக் குறித்து எளிய உண்மை யாதெனில், நாம் தீர்ப்புச் செலுத்தக்கூடாத நேரங்களில் இருப்பது போன்று, தீர்ப்புச்செலத்த வேண்டிய நேரங்களும் நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளன என்பதேயாகும்.
நாம் தீர்ப்பு வழங்கக்கூடாத சந்தர்ப்பங்களைக் குறித்து இங்கு நாம் பார்ப்போவம். மற்றவர்களடைய நோக்கங்களைக் குறித்து நாம் தீர்ப்பு வழங்கலாகாது. நாம் சர்வஞானி அல்லர். ஆகவே, அவர்கள் செய்கின்ற செயல்களை ஏன் செய்கிறார்கள் என்பதை நாம் அறியமாட்டோம். வேறொரு விசுவாசி செய்கின்ற ஊழியத்தை குறித்து நாம் தீர்ப்பு வழங்கக்கூடாது. அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி. சரி அல்லது தவறு என்று சொல்லமுடியாதபடி சில ஒழுக்கங்கள் இருக்கும். அப்படிப்பட்டவைகளில் தனது மனச்சான்றின்படி கவனத்தோடு நடக்கிற ஒருவரை நாம் குற்றப்படுத்தக்கூடாது. தங்களுடைய மனச்சாட்சியை மீறுவது அவர்களுக்குத் தவறாகும். வெளித்தோற்றத்தைக் கொண்டும் மனிதர்களைப் பாகுபடுத்தியும் நாம் தீர்ப்பு வழங்கலாகாது. இருதயத்தில் உள்ளதே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கடினமான முறையில் வார்த்தைகளால் குற்றப்படுத்துகின்ற ஆவியுடையோராய் நிச்சயம் நாம் இருக்கக்கூடாது. குற்றப்படுத்தவதைத் தன் பழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக இருப்பதில்லை.
ஆயினும், வேறுபல விஷயங்களைக் குறித்து நாம் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று கட்டளை பெற்றிருக்கிறோம். எல்லா போகங்களும் வேதத்தோடு உடன்பட்டு உள்ளனவா என்று ஒப்பிட்டுப் பார்த்துத் தீhப்புச்செய்யவேண்டும். அந்நிய நுகத்தோடு பிணைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக மற்றவர்கள் உண்மையான விசவாசிகளா என்று தீர்ப்புச்செய்யவேண்டும். விசுவாசிகள் நீதிமன்றங்களுக்குச் செல்லாதபடி, அவர்களுக்கிடையே உண்டாகும் வழக்குகளில் நாம் தீர்ப்பு வழங்கவேண்டும். விபரீதமான பாவங்களை உள்ளுர் சபையானது தீர்ப்புச் செய்து, அவ்வாறு குற்றம் இழைத்தவர்களைச் சபையின் ஐக்கியத்திலிருந்து வெளியேற்றவேண்டும். மூப்பர்களாகவோ அல்லது உதவிக்காரர்களாகவோ செயல்புரியத் தகுதியுடையவர்களா என்று மனிதர்களைக் குறித்து அச்சபையானது தீர்ப்புச்செய்யவேண்டும்.
குறைகளைக் கண்டுபிடிக்கும் குணத்தை நாம் அடியோடு விட்டுவிடவேண்டும் என்று தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கவில்லை. அதுபோல ஒழுக்கத்திற்கும் ஆவிக்குரியவற்றிற்கும் அளவுகோலைக் கொண்டிருக்கக்கூடாது என்றும் சொல்லவில்லை. ஆனால், எங்கே தடைசெய்யப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் நாம் குற்றப்படுத்தாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். எங்கே தீர்ப்புச் செய்யவேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கிறோமோ, அங்கே நியாயமாகத் தீர்ப்புச் செய்யவேண்டும்.