ஏசாயா 31:1-9
கர்த்தரிடத்தில் திரும்பு: நாசியில் சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர்பேரில் பற்றுதலாயிருப்பதே நலமாதலால் உன் வாழ்க்கையில் பாவமாகக் காணப்படும் எல்லாவற்றையும் அறிக்கை செய்து விட்டு விட்டு தேவனிடத்தில் சகாயம் பெற நாடு. அவர் உன்னை உன்னுடைய எல்லா இக்கட்டுகளினின்றும், சத்துருக்களினின்றும் நிச்சயமாக விடுவிப்பார். தேவனுக்குப் பிரியமில்லாத எல்லா விக்கிரகங்களையும், அசுத்தமான காரியங்களையும் உன்னிடத்திலிருந்து விலக்கு. இஸ்ரவேலின் பரிசுத்தர்: இஸ்ரவேல் ஜனங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாயிருந்தும், தங்களோடு யுத்தம் பண்ண விரோதிகள் எழும்பும் போதெல்லாம் தங்களை விடுவிக்க வல்லவராகிய தங்கள் தேவனை விட்டுவிட்டு எகிப்தியரிடத்திலும், இரட்சிக்க மாட்டாத மாம்சமான மனிதனிடத்திலும் சகாயம் பெறும்படி அவர்களையே நாடினார்கள். உன் துக்க சமயத்தில், சத்துரு நெருக்கும் போது யாரிடத்தில் நம்பிக்கை வைக்கிறாய்? அவரே உனக்கு அரணும், கோட்டையும். பெலனுமாய் இருக்கிறார். உன்னை நீதிமானாக மாற்றி நீ பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தமடைய உதவுவார். அவரையே பற்றிக் கொள்வாயா?