முந்தைய பக்கத்தில் நாம் பார்த்தது போன்று, விண்ணுலகம் செல்ல வௌ;வேறு தகுதிநிலை இல்லையென்பது உண்மையாக உள்ளதுபோலவே, நாம் அடையப்போகிற பலன்களில் வௌ;வேறு நிலைகள் உள்ளன என்பது மாபெரும் சத்தியமாகும். நமது செயல்பாடுகள் ஆய்வுசெய்யப்பட்டு சிலர் மிகுதியாகவும், சிலர் குறைவாகவும் பலனடையப்போகின்றனர். அதற்கென ஆய்வு செய்யப்படும் இடம் கிறிஸ்துவின் நியாயசனமாகும்.
விண்ணுலகம் செல்லும் மக்கள் அங்குள்ள மகிமையை அனுபவிப்பதில் வௌ;வேறு திறன்கொண்டவர்களாக காணப்படுவர். அங்கு எல்லோரும் மகிழ்ந்திருப்பர். ஆனால், சிலர் பிறரைக்காட்டிலும் கூடுதலாக மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடிவர்களாக இருப்பர். எல்லாருடைய பாத்திரங்களும் நிறைந்திருக்கும். சிலருடைய பாத்திரங்கள் மற்றவர்களுடைய பாத்திரங்களைக் காட்டிலும் பெரியதாயிருக்கும்.
மகிமை பொருந்திய நிலையை அடையும்போது நாம் அனைவரும் ஒன்றுபோலவே இருப்போம் என்ற எண்ணத்தை நாம் விட்டொழிக்கவேண்டும். நாம் எல்லாரும் எழுர்ச்சியற்றதும், மனச்சோர்வு அடைய செய்கிறதுமான ஒன்றுமையை உடையவர்களாய் இருப்போம் என்று வேதம் எங்கும் கற்பிக்கிறதில்லை. மாறாக, உண்மையோடும், ஒப்புவித்த நிலையிலும் வாழ்ந்தமைக்குரிய கிரீடங்களைப் பெறுவோம் என்றே வேதம் கற்பிக்கிறது. சிலர் பரிசுப்பொருட்களை அடைவர். சிலர் இழப்பை அடைவர்.
ஒரேவயது நிரம்பிய இரண்டு இளையர் ஒரே நேரத்தில் மனம் திரும்பினார்கள். தேவனுடைய அரசுக்காகவும் அவருடைய நீதிக்காகவும் தன்னை முற்றிலும் ஒப்புவித்து அதற்கே முதலிடம் கொடுத்து நாற்பது ஆண்டுகளை வெளிநாட்டிலே ஒருவர் கழிக்கிறார். மற்றவரோ தனது வாழ்வின் சிறப்பான பகுதிகளைச் செல்வத்தைச் சேர்க்கப் பயன்படுத்துகிறான். ஒருவர் கர்த்தருடைய செய்திகளைக் குறித்து உற்சாகத்தோடு பேசுகிறார். மற்றவரோ, வாணிபத்தின் செயற்காடுகளைக்குறித்து திறன்பட பேசுகிறார். கர்த்தரை மிகுதியாக அனுபவிக்க முதலாவது நபர் இப்பொழுதே திறன்பெற்றவராக இருக்கிறார். அந்தத் திறத்தை அவர் விண்ணுலகிற்கு எடுத்துச் செல்லுவார். இரண்டாவது நபரோ, கிறிஸ்துவின் ஆள்தத்துவம் மற்றும் கிரியை ஆகியவற்றின் மூலமாக மற்றவர்களுக்கு இணையாக விண்ணுலகம் செல்லத் தகுதி படைத்தவராக இருக்கிறார். ஆனால் ஆவிக்குரிய நிலையில் வளர்ச்சி குன்றியவராக இருக்கிறார். அந்த குன்றிய நிலையையே பரலோகிற்கு எடுத்துச் செல்கிறார்.
என்ன பரிசுப்பொருட்களை பெறப்போகிறோம், எவ்வளவாக நித்திய வீட்டினை அனுபவிக்கப்போகிறோம் என்பதை இங்குவாழும் ஒவ்வொரு நாளும் நாம் நிர்ணயிக்கிறவர்களாக இருக்கிறோம். வேதத்தைப்பற்றிய அறிவினாலும், அதற்கு கீழ்ப்படிகிறதினாலும், நமது ஜெப வாழ்க்கையினாலும், தேவ மக்களோடு நாம் கொள்கின்ற ஐக்கியத்தினாலும், கர்த்தருக்காக நாம் ஆற்றுகிற ஊழியத்தினாலும், தேவன் நம்மிடம் ஒப்புவித்திருக்கிறவைகளில் நாம் காண்பிக்கிற உண்மையுள்ள உக்கிராண ஊழியத்தினாலும் அதனை நிர்ணயிக்கிறவர்களாக இருக்கிறோம். கடந்துசெல்கின்ற ஒவ்வொரு நாளிலும் நித்தியத்திற்கென்று நாம் கட்டுகிறவர்களாக இருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்தவுடன் நாம் எவ்வௌற்றிற்கு முதலிடம் கொடுக்கிறோம், எவற்றைத் தெரிந்துகொள்கிறோம் என்பவற்றில் ஆழமான வேறுபாடுகள் உண்டாகும்.