ஜனவரி 23
நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே (எரேமி.45:5)
கனம் பொருந்திய மனிதன் என்று பெயர்பெற வேண்டும், பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலம் தமது பெயர் காணப்படவேண்டும் என்ற தந்திரமான சோதனைகள் கிறிஸ்தவ ஊழியத்திலும் ஏற்படும். ஆனால் இதனை நாம் வளரவிடுவோமெனில் பின்னர் இது மிகப்பெரிய கண்ணியாகிவிடும். கிறிஸ்துவின் மகிமையை இது கொள்ளையிடுகிறது. நம்முடைய சமாதானத்தையும், மனமகிழ்ச்சியையும் இது கொள்ளையிடுகிறது. பிசாசு சுடும் குண்டுகளுக்கு நாம் இலக்காகிவிடுகிறோம்.
கிறிஸ்துவின் மகிமையை இது கொள்ளையிடுகிறது. ஊ.ர். மெக்கின்டேஷ் என்பார், ஒருவரோ அல்லது அவரது ஊழியமோ சிறப்புவாய்ந்ததாக ஆகும்போது, அங்கே பெரிய ஆபத்து காத்திருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவேயன்றி வேறொருவர்மீது கவனம் செலுத்தப்படுகிறது என்றால், பிசாசு தனது நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய நேரத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறான் என்பதை அவர் அறியவேண்டும். ஒரு ஊழியம் ஆனது முடிந்தமட்டும் மிக எளிமையாகத் தொடங்கப்பட்டிருக்கலாம். என்றாலும் பரிசுத்த கவனக்குறைவினாலே, ஊழியரின் ஆவிக்குரிய குறைவினாலோ, அவரோ அல்லது அவருடைய ஊழியமோ அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கக்கூடியதாகக் காணப்படும். அப்பொழுது அவர் பிசாசின் வலைக்குள் வீழ்ந்துவிடுகிறார். கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை கனவீனப்படுத்துவதே சாத்தானின், இடைவிடாத பெரிய நோக்கமாக இருக்கிறது. கிறிஸ்தவ ஊழியமாகக் காணப்படுகிறவற்றில் இத்தகைய செயலைச் பிசாசினால் செய்யமுடியுமாயின், இன்னும் பெரிதான வெற்றிகளை அவனால் அடையமுடியுமென்று கூறியுள்ளார்.
திருவாளர் டென்னி அவர்களும் ஒரே நேரத்தில் தன்னைப் பெரியவன் என்றும் கிறிஸ்து அற்புதமானவர் என்றும், ஒரு மனிதனால் நிரூபிக்கமுடியாது எனக் கூறியுள்ளார்.
நம்மையே நாமும் இச்செயலில் கொள்ளையிடுகிறவர்களாக இருக்கிறோம். நான் பெரியவனாக ஆகவேண்டும் என்ற முயச்சியை கைவிடும்வரை உண்மையான சமாதானத்தையும், மன மகிழ்ச்சியையும் நான் அறிந்தேன் இல்லையென்று ஒருவர் கூறியுள்ளார்.
புகழ்பெறவேண்டும் என்னும் விருப்பம், சாத்தானின் தாக்குதலுக்கு ஆளாகும், அமர்ந்திருக்கும் வாத்தினைப்போல நம்மையாக்கும். எல்லோராலும் அறியப்பட்ட ஒருவருடைய வீழ்ச்சி, கிறிஸ்துவிற்கு அதிக நிந்தையைக் கொண்டுவரும்.
மேன்மைபாராட்டலை யோவான்ஸ்நானகன் விடாமுயற்சியுடன் துறந்தார். அவருடைய இலக்கு, அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்பதேயாகும்.
நம்மை மேலே வரும்படிக்கு கர்த்தர் அழைக்கும்வரை நாம் தாழ்மையான இடத்தில் தங்கியிருப்போம். கிறிஸ்து ஒருவராலே மட்டும் அன்புகூரப்படவும், பாராட்டப்படவும், மற்றவர்களால் அறியப்படாத சிறியவனாக இருக்கவும் என்னைக் காத்துக்கொள்ளும் என்பதே நமது ஜெபமாக இருக்கட்டும்.
நாசரேத் ஓர் சிற்றூர், கலிலேயாவும் எளிமையானதே.