டிசம்பர் 1
…… என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது, நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால்… (உபா.13:13-14)
இஸ்ரவேலிலே ஒரு நகரத்திலே தேவனைப் புறக்கணித்து, சிலை வணக்கத்தைப் பற்றிக்கொண்டார்கள் என்று வதந்தி பரவினால், அந்நகரத்திற்கு எதிராகத் தண்டனையைச் செலுத்தும் முன்பு தீர விசாரணை நடத்தவேண்டும்.
நாமும் ஒரு வதந்தியையோ புறங்கூறுதலையோ கேட்கும்போது கவனமற்றவர்களாகச் செயல்ப்படக்கூடாது. மாறாக ஆறுவகையான சோதனைகளின் மூலமாகச் சோதித்து அறிய வேண்டும். இது வெறும் வதந்தியா? நான் விசாரித்தேனா? நன்றாக நான் ஆராய்ந்து பார்த்தேனா? கவனமாய்க் கேட்டேனா? அது மெய்தானா? அது நிச்சயம் நிகழ்ந்ததா?
உண்மையில், சமய உலகில் அவ்வப்போது வெளிவருகின்ற, பெரும் பரபரப்ப+ட்டுகிற செய்திகளை மற்றவர்களிடம் கூறும் முன்னர் தீர விவாரிப்பதும் கவனத்தோடு நடந்துகொள்வதும் சிறந்த முறையாகும். நான் சில எடுத்துக்காட்டுக்களைத் தருகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த கதை இது. இது நிய+யார்க் நகரின் படகுத்துறை ஒன்றில் எருசலேம் ஆலயத்தைக் கட்டுவதற்கான கற்கள் ஆயத்தமாக வைக்கப்பட்டிருப்பதாகவும், இஸ்ரவேலில் ஏற்ற சூழ்நிலை உண்டாகும்போது, அக்கற்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் வதந்தி பரவிற்று. அவை இந்தியானா மாநிலத்திலிருந்து எடுக்கப்பட்ட சுண்ணாம்புக் கற்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்தச் செய்தியை மிகுந்த ஆவலோடு கிறிஸ்தவர்கள் பரப்பினார்கள். அச்செய்தியில் உண்மையேதும் இல்லையென்று அறிந்தபோது அவர்கள் வெட்கம் அடைந்தனர்.
வேறொரு சமயத்தில், இன்னொரு கதை பிறந்தது. மனிதனுடைய காலவரலாற்றைக் குறித்த விவரங்களை மிக விரிவாகக் கணிப்பொறி ஒன்றில் கொடுத்து, அதன் விடையைப் பார்த்தபோது, வேதத்தில் காண்கிறபடி யோசுவாவின் காலத்தில் ஒரு நாள் பகற்பொழுது நீட்டப்பட்டது உறுதியானது என்பதே அந்தக் கதை. வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற நிகழ்ச்சியை உறுதிசெய்கிற எந்த செய்தியையும், ஆர்வமிக்க விசுவாசிகள் பத்திரிகைகளில் உடனடியாக எழுதிப் பரப்புகின்றனர். அதைக் குறித்துப் பிரசங்கங்களும் செய்கின்றனர். பின்னர் அந்தச் செய்தி நீர்க்குமிழி போன்று வெடித்துச் சிதறிப்போகின்றது. எந்த அடிப்படையும் இல்லாத கதையாக அது முடிவடைகிறது.
சிறிது காலத்திற்கு முன்னதாக, மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட ஒரு மனிதனை அந்திகிறிஸ்து என்று உறுதி செய்வதற்குக் கணிதத்தைக் கொண்டு கணக்கு ஒன்றைச் செய்தனர். அது எவ்விதம் செய்யப்பட்டது என்பதைப் பாருங்கள். அந்த மனிதனின் பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணை மதிப்பீடகக் கொடுத்தனர். அதன் பின்னர் சில கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் எல்லாவற்றையும் செய்தனர். கிடைத்த விடை 666. இது எதனையும் உறுதிசெய்யவில்லை என்பதே உண்மை. எந்த ஒரு பெயரை எடுத்துக்கொண்டாலும் நம்மால் பல கணக்குகளைப்போட்டு 666 என்ற எண்ணை விடையாகக் கொண்டுவரலாம்.
சார்ல்ஸ் டார்வின், வாழ்வின் இறுதி நாட்களில் தனது பரிணாமக் கொள்கையைக் கைவிட்டு, வேதத்தை விசுவாசிக்கும் வாழ்விற்குத் திரும்பினார் என்னும் செய்தி அடங்கிய கைப்பிரதி ஒன்றை நான் கண்டேன். இது உண்மையாக இருக்கக்கூடும். அது உண்மையாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். அது உண்மையாக இருக்குமானால், ஒருநாள் அதைக் கண்டறிவேன். அது உண்மையானது என்பதற்குரிய ஆதாரம் என்னிடத்தில் இல்லை. ஆகவே அதை மற்றவர்களிடம் சொல்லத் துணியமாட்டேன்.
இன்றைய வசனத்தில் காண்கிற ஆறுவகையான சோதனைகளைக்கொண்டு எந்த ஒரு செய்தியையும் நாம் சோதித்துப் பார்ப்போமானால் இக்கட்டான சூழ்நிலையைச் சந்திக்கவோ, அவமானப்படவோ கூடியநிலை ஏற்படாது. இது வெறும் வதந்தியா? நான் விசாரித்தேனா? நன்றாக நான் ஆராய்ந்து பார்த்தேனா? கவனமாய்க் கேட்டேனா? அது மெய்தானா? அது நிச்சயமாய் நிகழ்ந்ததா?