Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home தினதியானம்

கதவருகில் நிற்கும் ஜீவாதிபதி

Kesaran by Kesaran
December 31, 2011
in தினதியானம்
0
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

டிசம்பர் 31
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்@ ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளி 3:20)
இன்னொரு ஆண்டின் முடிவிற்கு நாம் இப்பொழுது வந்திருக்கிறோம். உள்ளே வருகிறதற்கு அனுமதிகோரி மனிதரின் வாசற்படியில் பொறுமையுடன் கர்த்தர் இன்னும் நின்றுகொண்டிருக்கிறார். வெகுநேரம் அவர் வெளியிலே காக்கவைக்கப்பட்டிருக்கிறார். வேறு யாராக இருப்பினும் நம்பிக்கை இழந்து, திரும்பி வீட்டிற்குப் போயிருப்பார். ஆயின் நமது இரட்சகர் அங்ஙனம் செய்யார். அவர் நீடிய பொறுமையுடையவர், ஒருவரும் கெட்டுப்போகக் கூடாதெனக் காத்திருக்கிறார். ஒருநாள் கதவு வேகமாய்த் திறக்குமென்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

You might also like

Smith´s Daily Remembrancer – September 5

Smith´s Daily Remembrancer – September 4

Smith´s Daily Remembrancer – September 3

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பிற்கு பதில் கூற மறுப்போரைக் காணும் வேளையில் நாம் வியப்படைகிறோம். அயலகத்தார் கதவைத் தட்டுவார்கள் எனில், உடனடியாக கதவு திறக்கப்படுகிறது. ஒருவேளை விற்பனையாளன் கதவைத் தட்டியிருந்தால், வீட்டில் யாராவது ஒருவர் கதவைத் திறந்து, எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை என்று சொல்லுவார். ஒருவேளை நாட்டின் குடியரசுத்தலைவரோ மாநிலத்தின் ஆளுநரோ வந்திருந்தால், வீட்டில் இருப்போர் முந்தியடித்துக் கொண்டுபோய் கதவைத் திறப்பார் என்பது நிச்சயம். அவரை வரவேற்பது தாம் பெற்ற நற்பேறு என்று கருதுவார். ஆயின் படைப்பாளரும், தாங்குகிறவரும், மீட்பரும் கதவருகில் நிற்கும்போது பாராமுகத்தோடு அமைதியாயிருப்பது மிகுந்த விநோதமாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைக் கொள்ளையிட வரவில்லை, நமக்குக் கொடுக்கவே வந்திருக்கிறார் என்பதை அறிந்தும் மனிதன் அவருக்கு மறுப்புரை கொடுப்பது பகுத்தறிவற்ற செயலாகும். அவர் நீடுவாழ்வை மிகுதியாக நல்கவே வந்திருக்கிறார்.
வானொலி இறையியல் சொற்பொழிவாளர் ஒருவரிடம் இரவில் வெகுநேரம் கழித்துத் தொலைபேசியில் ஒருவர் தொடர்பு கொண்டார். தனது வீட்டிற்குச் செல்லும் முன்னர் அவரைச் சந்திக்க அனுமதி கோரினார். இரவு வெகுநேரம் ஆகிவிட்டதே என்று கருதி, பிரசங்கியார் அவர் வருவதைத் தடைசெய்யவேண்டும்மென்று நினைத்தார். பல காரணங்களைக் கூறியும் அவர் வற்புறுத்தவே கடைசியில் இணங்கினார். பார்வையாளர், வானொலி ஊழியத்திற்குச் செலவாகும் பெருந்தொகையை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு உடனடியாகச் சென்றுவிட்டார். அப்பொழுது அந்தப் பிரசங்கியார், அவரை வீட்டிற்கு வரவேற்றது எவ்வளவு நல்லது என்று சொல்லி மகிழ்ந்தார்.

ஜோ பிலிங்கோ இதனை உயிரூட்டம் உடைய கதையாக வடிவமைத்துக் கூறியுள்ளார். வீட்டில் உள்ளோர் உரையாடிக் கொண்டிருந்தனர். வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் திடீரெனக் கேட்டது. யாரோ வந்திருக்கிறார் என்று ஒருவர் கூறினார். மற்றொருவர் குதித்தெழுந்து ஓடிச்சென்று கதவைத் திறந்தார். வேறோருவர், வந்திருப்பது யார்? என்று வினவினார். வாசற்கதவு அருகிலிருந்து பதில் வந்தது. இறுதியில் வீட்டின் தலைவர் அவரை உள்ளே வரச்சொல் என்று கத்தினார்.

சுருங்கச் சொன்னால், இதுவே நற்செய்தியாகும். கவனித்துக் கேளுங்கள்! யாரோ ஒருவர் கதவருகில் நிற்கிறார். அவர் யார்? அவரே ஜீவாதிபதியும் மகிமையின் கர்த்தருமாவார். அவரே நமக்குப் பதில் ஆளாக மரணத்தை ஏற்றுக்கொண்டு, அடக்கம்செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவர். மகிமையில் முடிசூட்டப்பட்டவராக இப்பொழுது திகழ்கிறார். தம்முடைய மக்களைத் தம்மோடு சேர்த்துக்கொள்ள மீண்டும் வரப்போகிறவர் அவரே, அவரை உள்ளே வரும்படியாக அழைப்பீர்களாக.

Share30Tweet19
Kesaran

Kesaran

Recommended For You

Smith´s Daily Remembrancer – September 5

September 5, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 5 'நான் புறம்பே தள்ளுவதில்லை' யோவான் 6:37 எவ்வளவு பலத்த விசுவாசியும் சிலவேளை பயத்துக்கு இடங்கொடுக்கிறதுண்டு. தேவன் தனக்காகச் செய்த யாவற்றையும் சந்தேகிக்கிறதுமன்றி, தேவ வசனத்திலுள்ள எந்த வாக்குத்தத்தமும் தனக்குரியதோ என்று கலங்குகிறதுமுண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் முன்னே...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 4

September 4, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 4 'உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷம்' எபேசியர் 1:13 நம்முடைய ரட்சிப்பு பாவத்தினின்றும், சாபத்தினின்றும், தேவகோபத்தினின்றும் உண்டாகும் விடுதலைதான். இது நம்மாலே முடியாது. தேவன் நம்மை இலவசமாய்ப் பரிபூரணமாய், நித்தியமாய் மீட்கும்பொருட்டுத் தம்முடைய சொந்தக் குமாரனை நம்முடைய தன்மையைத்...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 3

September 3, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 3 'என் தேவன் உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார்' பிலிப்பியர் 4:19 இப்படிப் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியருக்கு நிச்சயம் சொல்லுகிறார்; நமக்கும் இப்படியே நிச்சயம் சொல்லுகிறார். அவர்களுக்கு அநேகம் குறைவுகளிருந்தன; நமக்கும் அப்படித்தான். அவர்கள் தேவனைச் சார்ந்திருந்தார்கள்; நாமும்...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 2

September 2, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 2 'மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு' ரோமர் 11:20 விசுவாசிகள் தங்களைக்குறித்து சிலவேளைகளில் எண்ணவேண்டியதற்கு மேலாக எண்ணிச் சோதனையில் விழுகிறார்கள். தங்களுக்கும், மிகவும் நிர்ப்பந்தரான பாவிகட்குமிருக்கிற வித்தியாசம் தேவனுடைய சுத்த இலவசமான கிருபையினால் உண்டாயிருக்கிறதை மறந்துவிடுகிறார்கள். தாங்கள் பலவீனரானதால்,...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 1

September 1, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 1 'மீட்கிறவர்' ரோமர் 11:26 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்கு வேண்டிய ஒத்தாசைசெய்து, அவர்களை மீட்க அபிஷேகம் பெற்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். இதற்காக ஞானம் அறிவென்னும் பொக்கிஷங்கள் அவரிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சகல மாம்சத்தின்மேலும் அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு...

Read moreDetails
Next Post

Words of Life TAMIL (தமிழ்)

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?