யூதா 1:1-16
கடவுளின் கிருபை பாவம் செய்து கொண்டேயிருப்பதற்கு இடம் கொடுக்கிறதா? திரும்பவும் திரும்பவும் பாவம் செய்வதினால் கடவுளின் கிருபையை இன்னும் அதிகமாக அநுபவிக்க முடியுமா? அப்போஸ்தலன் இதே கேள்விகளை ரோமர் 6:1,2ல் கேட்டு பதிலளிக்கிறார். சில கள்ளப் போதகர் சபைக்குள் அன்பின் விருந்து சமங்களில் நுழைந்திருக்கிறார்களே. அவர்கள் கடவுளின் கிருபை நமக்கிருப்பதால் காமவிகாரத்தில் ஈடுபடலாமென்று போதித்து சபையின் ஆவிக்குரிய ஜீவியத்தைக் கறைபடுத்தி விட்டார்கள். அப்படிப்பட்டவர்களுடைய நடத்தைக்கு என்ன பலன் கிடைக்குமென்பதை யூதா கடினமான வார்த்தைகள் மூலம் சபையாருக்கு எடுத்துக் காட்டுகிறார். இவர்கள் ஆக்கினைக்குள்ளான நித்திய தண்டனையை அநுபவிக்கிறதினாலே மற்றவர்களுக்கு எச்சரிப்பு கொடுக்கிற முகாந்திரமாயிருக்கிறார்கள். நாம் சத்திய வேதத்தில் கிறிஸ்துவை பின் பற்றுபவர்களைப் பற்றியும் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களைப் பற்றியும் வாசிக்கிறோம். அவர்களின் ஜீவியத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறோமா?