மத்தேயு 15:21-39
தளரா நம்பிக்கை: இயேசு பிற இனத்தவரிடம் அக்கறையற்றவரல்ல. குறிப்பிட்ட காலத்திற்குள் இராஜ்யத்தின் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டியதிருந்தது. எனவே, இஸ்ரவேலரிடம் மட்டுமே சென்றார். இஸ்ரவேலரையும் தாண்டி பிறரிடம் நற்செய்தி அறிவிக்கும் காலம் இன்னும் வரவில்லை. மேலும், இயேசு அக் கானானியப் பெண்ணின விசுவாசத்தை சோதிக்க விரும்பினார். வ. 26 – வ. 24-ல் இயேசு தாம் கூறியதை வலியுறுத்துகிறார். நாய் – பிற இனத்தவரைக் குறித்த யூதர் பயன்படுத்திய இழி சொல். வ. 27 – இதையும் ஏற்றுக்கொண்டு, கடவுளின் கருணைக்கு நான் உரிமைபாராட்டும் தகுதி எனக்கில்லை என்றாலும், சிந்தியதை எறிவதுபோல், எனக்கு உதவ வேண்டும் என்று கேட்கிறாள், அப்பெண். நான் தாழ்மையுடன கடவுளிடம் வருகிறேனா? அயரா அன்பு: வ. 30,31 – இயேசுவின் கரிசனைக் கட்டுப்பட்டதல்ல. பிற இனத்தவரிடையே இக்குணமாக்குதல் நடைபெற்றிருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினர். குறையா நிறைவு: ஒரே நிகழ்ச்சி இருமுறை கூறபட்டுள்ளது என்று எண்ணத் தேவையில்லை. இருமுறை கூறி இடத்தை வீணாக்கமாட்டார். சிறுகுறிப்புகளில் வேறுபாடுகள் உண்டு. இயேசுவே பின்னர் இருமுறையும் எஞ்சியதைக் குறிப்பிடுகிறார். கடவுளின் அளவிலாக் கொடைக்கு வரையறை கட்ட வேண்டியதில்லை நாம்.