ஏசா.19:1-25
எகிப்தின் மத்தியில் கர்த்தரின் பலிபீடம்: இஸ்ரவேலின் தேவன் சர்வதேசதின் தேவன். ஆகவே எல்லா தேசத்தினரும் ஒரு நாள் அவரது ஆட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும். மோசேயின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட கடவுளை எகிப்தியர் ஏற்றுக் கொள்வர். கர்த்தரை அறிந்து அவருக்குத் தங்கள் பொருத்தனைகளைச் செலுத்துவர். ஒரு காலத்தில் வாதைகளால் வாதிக்கப்பட்ட எகிப்தை கர்த்தர் குணமாக்குவார். கடுந்துயரத்திற்கும் ஓர் புதிய யுகம் உருவாகிறது. கர்த்தரை நோக்கிப்பார். சிலுவையில் உனது நோய்களையும் சுமந்த தேவன் இன்று உன்னை குணமாக்குகிறார். எகிப்தியர் என் ஜனங்கள்; அசீரியர் என் கரத்தின் கிரியை: தான் ஆராதிக்கும் கர்த்தர் சர்வதேசத்தின் தேவன் என்பது தான் ஏசாயாவின் தரிசனம். அவர் உலகமனைத்தின் மன்னர். ஜீவனுள்ள ஆண்டவரிடத்தில் திரும்பும் போது தேசங்களின் மத்தியில் ஒப்புரவாகுதலும் சமாதானமும் காணப்படும். இஸ்ரவேலின் மக்கள் ஒரு காலத்தில் எகிப்தின் அடிமைத்தனத்தினின்று மீட்கப்பட்டவர்கள் நமது ரட்சிப்பு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் செய்கையாயிருக்கிறது. சமாதானத்தைக் குறித்த நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில் கடவுள் நம்பிக்கையையும் சமாதானத்தையும் தருகிறவர் என்பதை நினைவு கூறுவோம். மனித சரித்திரத்தில் கிறிஸ்துவின் சிலுவை ஓர் ஒப்பற்ற நிகழ்ச்சியாகும்.