ஏசாயா 37:1-20
அசரியா இராஜாவின் தூஷண வார்த்தைகளினிமித்தம் மனம் நொந்து தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு துக்கத்துடன் வந்த தனது பிரபுக்களோடு தானும் தனது வஸ்திரங்களை கிழித்து தேவ சமூகத்தில் தன்னைத் தாழ்த்தும் எசேக்கியா ஒரு சிறந்த இராஜா. அவரது பிரசன்னத்தைத் தேடவும், அவருடைய ஊழியக்காரன் மூலமாய் தேவனுடைய வார்த்தையைக் கேட்கவும் தீவிரிக்கிறான். ஆறுதலான தேவ வாக்கை ஏசாயா தீர்க்கதரிசிமூலமாக பெற்றுக் கொண்ட பின்பும் சத்துரு கடிதத்தின் மூலமாக எசேக்கியாவை பயமுறுத்துவதைக் காணலாம். எல்லா சூழ்நிலையிலும் தேவ சமூகத்தை நாடும் பழக்கமுள்ள இராஜா மறுபடியும் தேவாலயத்தில் அந்த கடிதத்தையே கர்த்தருக்கு முன்பாக விரித்து முகமுகமாய் (மோசேயைப்போல்) தேவனோடு சம்பாஷிப்பதை வாசிக்கும் போது அத்தகைய நம்பிக்கையும் மற்றும் தேவன் பேரில் அவ்வளவு உறுதியும் எனக்கு இருக்கிறதா. என்று ஆராய்ந்து அறிதல் நல்லது. (2 இராஜாக்கள் 19:1-19) எசேக்கியா அரசனிடத்திலிருந்து ஆவிக்குரிய அநேக பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.