முன்னுரைப்பு: சங்கீதம் 110:4
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார். மனம் மாறாமலுமிருப்பார்.
சகரியா 6:12-13
……. சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும். அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார். தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார். இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.
நிறைவேறுதல்: எபிரெயர் 3:1
இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்.
எபிரெயர் 5:5-6
அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராயிருக்கிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை. நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார். அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.
ஒரு ஆசாரியன் தன் ஜனத்தின் பாவங்களுக்காக பலி செலுத்தி ஆண்டவரிடம் பரிந்து மன்றாடுவதுபோல இயேசு கிறிஸ்து உலக மக்களுக்காக தம்மையே பலியாக ஒப்புக் கொடுத்து ஆண்டவரின் வலது பாரிசத்திலிருந்துகொண்டு நமக்காகப் பரிந்து பேசும் ஆசாரியராயிருக்கிறார். இப்படியாக தாவீது, சகரியா முதலியவர்கள் மூலமாய் முன்னுரைக்கப்பட்டவைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்.