February

பெப்ரவரி 2

“…. அவள்…. வெட்கப்படவேண்டாமோ?” (எண்.12:4)

உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டுரம் உள்ளது, பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? (நீதி.27:14) என்று நீதிமொழிகளில் ஒரு பெரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மிரீயாமும், ஆரோனும் மோசேயின் பேரில் பொறாமை கொண்டது நியாயம் அல்ல. அவர்களுக்குப் பெரும் பொறுப்புகள் இருந்தன. உயர்ந்த நிலையில் இருந்தனர். இருப்பினும் இஸ்ரவேலர் அனைவருக்கும் மோசே தலைவனாக இருந்ததினால் அவன்மேல் அவர்கள் பொறாமை கொண்டனர்.

மக்கள் தலைவனாக இருப்பவர்கள் எவரும், பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் யாவரும் மக்களுடைய வெறுப்பையும், மதிப்புக் குறைவையும் பெறுவர். தங்களுக்குப் பிடிக்காதவர்களை தள்ளிவிட்டுத் தாங்கள் உயரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். யோசேப்பின் தமையன்மார் அவன்மீது பொறாமை கொண்டனர். தாவீதின்மேல் சவுல் மன்னன் பொறாமை, ஒரு பகுதி மக்களால் வெறுக்கப்படுதல், மற்றொரு பகுதியினரால் புகழப்படுதல். இது நல்லாருக்கும் பொல்லாருக்கும் கிடைக்கும் அனுபவம்.

பொறாமைகொண்டு முறுமுறுக்கும் பண்பு நம்மிடம் இருப்பது வெட்கத்துக்குரியதுதான். மிரீயாமின் உடலில் குஷ்டம் தோன்றியது போன்று மனித உள்ளத்தில் கெட்டசிந்தை தோன்றியுள்ளது. இது நல்ல பாம்பின் பல்லில் உள்ள கொடியவிஷத்திற்கு ஒப்பானது. தேவனுடைய ஊழியர்கள் மேல் பொறாமை கொண்டு அவர்களைப் பற்றி பேசினவைகளைக் குறித்து நாம் வெட்கப்படவேண்டும். எத்தனை முறை அவர்களுடைய தவறுகள் என்று நாம் கருதினவற்றை பெரிதுபடுத்திக் கூறியுள்ளோம். எத்தனை முறை அவர்களுடைய உண்மையான நற்குணங்களைக் குறைத்து மதிப்பிட்டுக் கூறியுள்ளோம். இவையெல்லாவற்றையும் குறித்து நாம் வெட்கப்படவேண்டியது அவசியம்.