யோவே.2:1-17
எக்காளத்தின் தொனி, நெருங்கி வரும் சத்துருவின் சேனையின் தொனிப்போல் அபாய அடையாளத்தைக் காண்பிக்கிறது (3-11). இந்த வசனங்கள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பின், பயங்கரத்தை ஒரு யுத்தத்திற்கு ஒப்பிடுகிறது. குதிரைகளையும், இரதங்களையும் தடுக்க முடியாது (5). கர்த்தரின் நாளை, வெட்டுக்கிளிகளின் மூலம் கடவுளின் நியாயத் தீர்ப்பை இணைக்கிறார் (10). யார் இந்த நாளைச் சகிக்கக்கூடும்?தேவன் தமது ஜனத்தை மனந்திரும்புதலுக்கு அழைக்கிறார். அவர் இரக்கமும் மனதுருக்கமும் மிகுந்தவர் (வ. 13). தேவனிடம் திரும்புவதற்கு காலங்கடந்துவிடவில்லை. மணவாட்டி தன் அறையை விட்டு வெளிவருவது போல் இஸ்ரவேல் மக்கள் தேவனைத் துரிதமாக சந்திப்பதற்கு அழைக்கிறார். இஸ்ரவேலரே தேவனின் விசேஷித்த சொத்து உடைமை போன்றவர்கள் (வ. 17, யாத் 19:5). யூதா, தன் அறியாமைக் குறித்து வாதாடாது தேவனின் மகிமை உலகத்திலே அவமாக்கப்படுவதற்காக வாதாட வேண்டும்.