September

இரண்டில் ஒன்று

2024 செப்டம்பர் 20 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,21) “அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான்” (வசனம் 21). இப்பொழுது பிரச்சினை எலியாவுக்கும் ஆகாபுக்குமானதல்ல; பரிசுத்த தேவனுக்கும் பாகாலுக்குமானது. இஸ்ரவேல் நாட்டின் மக்கள் இரண்டு நினைவுகளால் ஆட்கொள்ளப்பட்டு, சரியான தீர்மானம் எடுக்காதபடிக்குக் குந்திக்குந்தி நடந்தார்கள். எனவே இப்பொழுது இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது.…

September

சர்வ ஞானியாகிய கர்த்தர்

2024 செப்டம்பர் 19 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,20) “அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்” (வசனம் 20). எலியாவின் கோரிக்கையை ஆகாப் அப்படியே ஏற்றுச் செயல்பட்டான். இதுவரையிலும் அவனைக் கொலை செய்ய வேண்டும் என்று தேடியலைந்தவன் இப்பொழுது அமைதியாகிவிட்டான். அவன் தேசத்தில் மழைபெய்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டன. தண்ணீரைத் தேடி அலைந்ததில் அவன் மிகவும் சோர்வுற்றிருந்தான். எனவே மீண்டும் மழை வேண்டுமென…

September

பாவத்தை வெளிப்படுத்துதல்

2024 செப்டம்பர் 18 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,19 முதல் 20 வரை) “இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்” (வசனம் 18). ஆகாப் எலியாவின்மீது கூறிய குற்றச்சாட்டு உண்மையானதா? அல்லது எலியா ஆகாப்மீது கூறிய குற்றச்சாட்டு உண்மையானதா? இவற்றில் எது சரி என்பதை அரசனுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்திக்காட்டவே கர்மேல் மலைக்கு பாகாலின் தீர்க்கதரிசிகளை எலியா…

September

பாவத்தைச் சுட்டிக்காட்டுதல்

2024 செப்டம்பர் 17 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,18) “அதற்கு அவன் (எலியா) : இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்” (வசனம் 18). “இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல” (வசனம் 18) என்று ஆகாப் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை எலியா மறுத்தான். நாம் அங்கம் வகிக்கிற சமுதாயத்திலும், சபையிலும், குடும்பத்திலும் நேரிடுகின்ற குழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும், பிரிவினைகளுக்கும் நான் காரணம்…

September

தேவபயமும் தைரியமும்

2024 செப்டம்பர் 16 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,18) “அதற்கு அவன் (எலியா) : இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்” (வசனம் 18). இந்த வார்த்தைகளை எலியா தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்யத் தேடுகிற இஸ்ரவேலின் ஒரு கொடுங்கோல் ராஜாவினிடத்தில் பேசுகிறான் என்பதை நினைத்துக்கொள்வோம். தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது என்று வாசிக்கிறதுபோல, எலியா வெறுமனே வாய்ச்சொல் வீரன் அல்லன்,…

September

வீண்பழி சுமத்துதல்

2024 செப்டம்பர் 15 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,17) “ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்” (வசனம் 17). எலியா தாம் உறுதியளித்தபடியே ஆகாப் வரும்வரை காத்திருந்தான். “ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா” என்னும் குற்றச்சாட்டைக் கூறினான். ஒபதியா எலியாவைச் சந்தித்ததற்கும், ஆகாப் எலியாவைச் சந்தித்ததற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு? உள்ளத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று சொல்லப்பட்டிருக்கிறதுபோல, அவன் எலியாவைக்…

September

பயத்தைப் போக்குதல்

2024 செப்டம்பர் 14 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,15 முதல் 16 வரை) “அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்” (வசனம் 15). சந்தேகத்துடனும், குழப்பத்துடனும் தயங்கி நின்ற ஒபதியாவுக்கு எலியா செய்த முதல் காரியம் தன்னுடைய உண்மைத் தன்மையை நிரூபித்ததாகும். “கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” என்று எலியா ஒபதியாவுக்கு உறுதியளித்தான். ஒரு மூத்த…

September

விசுவாசத்துக்கு ஏற்ப நடத்தல்

2024 செப்டம்பர் 13 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,11 முதல் 14 வரை) “இப்போதும் என் ஆண்டவன் என்னைக் கொன்றுபோடும்படியாக, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான்” (வசனம் 14). ஒபதியா இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவர்களைப் பிரதிபலித்துக் காட்டுகிறான் என்று நாம் ஏற்கனவே சிந்தித்தோம். இன்றைய நாளிலும் அவனைப் பற்றி இன்னும் சிறிது காரியங்களைச் சிந்திப்போம். ஒபதியாவைப் போன்று கிறிஸ்தவர்களாகிய நாமும் இந்தச் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்திலும்…

September

கர்த்தரில் மறைந்திருத்தல்

2024 செப்டம்பர் 12 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,10) “உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” (வசனம் 10). ஒபதியாவும் எலியாவும் சந்தித்துக்கொண்டது எவ்வாறு தேவ செயலாக இருந்ததோ அவ்வாறே மூன்றரை ஆண்டு காலமாக ஆகாபும் எலியாவும் சந்தித்துக்கொள்ளாமல் இருந்ததும் தேவ செயலாகும். ஆகாப் மனிதரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று சொல்லும் போது, எலியாவைக் கண்டுபிடிக்கும்படி அவன் எடுத்த…

September

பயமின்றி கர்த்தருக்காக உழைத்தல்

2024 செப்டம்பர் 11 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,8 முதல் 9 வரை) “அவன் (எலியா), நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்றான்” (வசனம் 8). ஒபதியா கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவனாக இருந்தாலும், மனிதரைக் குறித்த பயமும் அவனது உள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்தது. எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்று அவன் சொன்னபோது, “ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படிக்கு, நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க…