October

இளைப்பாறுதல் தரும் தேவன்

2024 அக்டோபர் 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,6 முதல் 7 வரை) “அப்பொழுது அவன் (எலியா), புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான்” (வசனம் 6). தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்ததையும் எலியா கண்டு, அவற்றைப் புசித்துக் குடித்துத் திரும்பவும் படுத்துக் கொண்டான். ஒரு தேவனுடைய மனிதனின் யதார்த்தமான செயல்களை எவ்வித மிகைப்படுத்தலும் இன்றி இருக்கிற வண்ணமாக வேதாகமம் பதிவு செய்திருக்கிறதைக் காண்கிறோம். வேதம் உண்மையை மட்டுமே பதிவு…

October

மாறாத தேவனுடைய அன்பு

2024 அக்டோபர் 20 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,6) “அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது” (வசனம் 6). எலியாவைத் தட்டியெழுப்பி, சாப்பிடு என்று சொன்ன தூதன், அதற்கான உணவையும் அங்கே ஆயத்தமாக வைத்திருந்ததைக் காண்கிறோம். எலியா கண் விழித்துப் பார்த்தபோது, தீயில் சுடப்பட்ட அடையும், குடிப்பதற்கான தண்ணீரும் அங்கே இருந்தது. நம்முடைய தேவன் வெறுமனே வார்த்தையில் ஆறுதல் சொல்கிற தேவன் அல்லர், அவர்…

October

தூதர்களின் ஒத்தாசைகள்

2024 அக்டோபர் 19 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,5) “அப்பொழுது ஒரு தூதன் அவனைத் (எலியாவைத்) தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்” (வசனம் 5). சூரைச் செடியின்கீழ் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த எலியாவை ஒரு தூதன் தட்டி எழுப்பி உணவருந்தச் சொன்னான். கர்த்தர் தம்முடைய ஊழியக்காரன் மீது கொண்டிருக்கிற கனிவான அக்கறையை இது காட்டுகிறது. மனச்சோர்விலிருந்து விடுபட தூக்கத்தை அளித்தவர் இப்பொழுது அவனுடைய சரீரத்துக்குத் தேவையான ஆகாரத்தைக் கொடுக்கிறார். நம்முடைய ஆண்டவர் நமது எல்லா நிலைகளிலும் அக்கறையுள்ளவர்…

October

மனச்சோர்வுக்கு மருந்து

2024 அக்டோபர் 18 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,5) “ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்” (வசனம் 5). எலியா, தனது பிரயாசத்தினால் எவ்விதப் பலனும் உண்டாகவில்லை என்பதைக் கண்டு சோர்வுற்று, விரக்தியடைந்து, பாலைவனத்தில் ஒரு சூரைச் செடியின் கீழ் படுத்துக்கொண்டான். அவன் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவனாக தன்னந்தனியாக இருந்தாலும் அண்ட சராசரங்கள் யாவற்றையும் படைத்த தேவனுடைய கண்களிலிருந்து அவன் தப்பிப் போகமுடியாது. “நான் வானத்திற்கு ஏறினாலும்,…

October

காத்திருத்தல்

2024 அக்டோபர் 17 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,4) “(எலியா) போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி…” (வசனம் 4). கிறிஸ்தவ வாழ்க்கையில் ஏற்படுகிற பாடுகளால் நாம் துவண்டுவிடுகிறோம். அதற்கான காரணமே அறியாமல் கலங்கித் தவிக்கிறோம். நம் பாடுகளுக்கான காரணங்களை நாம் மெய்யாகவே ஆராய்ந்து பார்ப்போமானால் ஏதோ ஒரு காரியத்தை நாம் நமது சொந்த முயற்சியால் செய்யத் தொடங்கியிருப்போம். தேவதுணையின்றி செய்யப்படுகிற காரியங்கள் நமக்கு எளிதில்…

October

கேட்கப்படாத ஜெபம்

2024 அக்டோபர் 16 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,4) “அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி…” (வசனம் 4). எலியா ஒரு சூரைச் செடியின் கீழ் அமர்ந்துகொண்டு, “போதும் கர்த்தாவே என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்” என்று ஜெபம் செய்தான். வானத்திலிருந்து அக்கினியை இறக்கும் என்று எலியா ஜெபித்தபோது…

October

தனிமையும் விரக்தியும்

2024 அக்டோபர் 15 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,3) “அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்” (வசனம் 3). எலியா நம்மைப் போல பாடுள்ள மனிதன் என்றே யாக்கோபு நமக்குச் சுட்டிக்காட்டுகிறார் (யாக்கோபு 5,17). அதாவது எல்லா விசுவாசிகளுக்கும் வரக்கூடிய பாடுகளை அவனும் எதிர்கொண்டான். ஆவிக்குரிய செழிப்பின் உச்சியில் இருக்கிறவர்கள்கூட வீழ்ச்சியின் பள்ளத்தாக்கில் விழுந்துவிட முடியும். 850 பாகால் தீர்க்கதரிசிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவன்,…

October

பழிவாங்குதல்

2024 அக்டோபர் 14 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,3) “அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப் போனான்” (வசனம் 3). யேசபேலின் சபதம் எலியாவுக்குத் தெரிய வந்தது. அவன் அவளிடத்திலிருந்து தப்பிப் பிழைக்கும்படி பெயர்செபாவுக்கு ஓடிப்போனான். ஆகாப் ராஜாவையும், எண்ணூற்றி ஐம்பது பாகால் தீர்க்கதரிசிகளையும் தனியொருவனாக எதிர்த்து நின்றவன், யேசபேலுக்குப் பயந்து ஓடியதற்கான காரணம் நமக்கு வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. ஆயினும் கர்த்தர் இந்தச் சம்பவத்தை வேத புத்தகத்தில் எவ்வித…

October

உத்திரவங்கள் பெருகுதல்

2024 அக்டோபர் 13 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,2) “அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள்” (வசனம் 2). நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று யேசபேல் எலியாவிடம் சொல்லச் சொன்னாள். அவள் எலியாவை இரகசியமாய்…

October

பொய்ச் செய்தியைப் பரப்புதல்

2024 அக்டோபர் 12 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,1 முதல் 2 வரை) “எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்” (வசனம் 1). எலியா செய்த அனைத்தையும் ஆகாப் ராஜா தன் மனைவி யேசபேலிடம் கூறினான். அந்த இடத்தில் கர்த்தர் எலியாவைப் பயன்படுத்தினார். அன்றைய நாளில் கர்த்தரே வானத்திலிருந்து அக்கினியை அனுப்பி, பலியையும், தண்ணீரையும், கற்களையும் பட்சித்திருந்தார். இது கர்த்தருடைய செயலே அன்றி எலியாவின் தனிப்பட்ட…